நீதிமன்றத்தில் கட்சித் தொண்டர்களை அடிக்க முயன்ற விஜயகாந்த்தால் பெரும் பரபரப்பு

Published:

தஞ்சாவூரில் நடைபெற்ற தேமுதிக பொதுக் கூட்டத்தின் போது, முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை அகற்றிய சம்பவம் குறித்து விஜயகாந்த் உட்பட தேமுதிகவினர் மீது தமிழக அரசு அவதூறு வழக்குத் தொடர்ந்தது.இந்த வழக்கு விசாரணைக்காக இன்று தஞ்சாவூர் நீதிமன்றத்துக்கு நேரில் ஆஜராக தேமுதிக தலைவர் விஜயகாந்த் வந்தார்.

அப்போது, அங்கே ஏராளமான தேமுதிக தொண்டர்கள் திரண்டதால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. விஜயகாந்த்தை தொண்டர்கள் நெருக்கியதால், அவர் தன் கட்சித் தொண்டர்களையே அடிக்க சென்றார். அருகில் இருந்த கட்சியின் முக்கியத் தலைவர்களால் விஜயகாந்தின் அடியில் இருந்து தொண்டர்கள் தப்பினர். இதனால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related articles

Recent articles

spot_img