தமிழக செய்தித்துறை விளம்பரங்களில் நடித்ததால், அதிமுகவில் சேருவார் என தகவல் வெளியான நிலையில், சட்டப்பேரவை தேர்தலில் எந்த கட்சிக்கும் பிரசாரம் செய்ய போவதில்லை என நடிகர் பிரபு தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் நகை கடை திறப்பு விழாவில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய பிரபு, தனது தந்தையின் அரசியல் வாழ்க்கையை பார்த்த பின் அரசியலில் ஆர்வம் இல்லாமல் போய்விட்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும், தான் எந்த கட்சியையும் சாராதவன் என்றும் பிரபு விளக்கம் அளித்துள்ளார். அனைத்து கட்சியினரும் தனக்கு வேண்டியர்கள் என்றும், தான் எந்த அணிக்கும் பிரசாரம் செய்யப் போவதில்லை என்றும் நடிகர் பிரபு தெரிவித்துள்ளார்.


