சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

1001359208 - 2026

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப் பட்டியில் இன்று 13 ஏப்ரல் திங்கட்கிழமை காலை பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.பலர் காயமடைந்தனர்.

  •  சாத்தூர் அருகே உள்ள மடத்துப்பட்டி கிராமத்தில் இயங்கி வந்த எக்ஸெல் பட்டாசு ஆலையில் இன்று காலை வழக்கம் போல் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்தபோது இந்த வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் பட்டாசு ஆலை தரைமட்டமானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
  •  இந்த விபத்தில் பாண்டி மற்றும் ரவி என்ற இரண்டு தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும், படுகாயமடைந்த தொழிலாளர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
  • தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆலையின் உரிமம் புதுப்பிக்கப்படவில்லை என்றும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் மற்றும் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

அரசு அதிகாரிகளின் நெருக்கடி அதிகமாக உள்ள காரணத்தால் தான் தொழிலாளர்களை அவசர படுத்தி வேலை வாங்கும் சூழ்நிலையால் தான் இது போன்ற பட்டாசு ஆலை வெடிவிபத்து நடப்பது என்னால் புரிந்து கொள்ள முடிகிறது-சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தை நேரில் பார்வையிட்ட பின் பாஜக மாநிலத்தலைவரும் சாத்தூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளருமான நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

ALSO READ:  மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என். ரவி நியமனம்! 
1001359209 - 2026

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சத்திரப்பட்டியில் கண்ணன் என்பவருக்கு சொந்தமான எக்ஸெல் பட்டாசு ஆலையில் இன்று ஏற்பட்ட வெடிவிபத்தில் தாயில்பட்டியை சேர்ந்த பாண்டி என்ற தொழிலாளி உடல்கருகி பலியானார்.மேலும் 3 தொழிலாளர்கள் படுகாயமடைந்த நிலையில் 5 தொழிலாளர்கள் லேசான காயமுடன்
மீட்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிசணைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் வெடிவிபத்து நடந்த பட்டாசு ஆலைக்கு பாஜக மாநிலத்தலைவரும் சாத்தூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளருமான நயினார் நாகேந்திரன் நேரில் சென்று பார்வையிட்டார்.பின் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
இது போன்ற பட்டாசு விபத்து நடந்ததை முதல் முறையாக இப்போது தான் பார்க்கிறேன் என்றும் இந்தப் பகுதி வானம் பார்த்த பூமி, இப்பகுதி மக்களின் வாழ்வாதாரமே பட்டாசு தொழிலை நம்பி தான் உள்ளது என்றும் அரசு அதிகாரிகளின் நெருக்கடி அதிகமாக உள்ள காரணத்தால் தான், தொழிலாளர்களை அவசரப்படுத்தி வேலை வாங்கும் சூழ்நிலையால் தான் இது போன்ற விபத்து நடப்பது என்னால் புரிந்து கொள்ள முடிகிறது என்றும் அரசு அதிகாரிகள் எடுக்கக்கூடிய தீவிர நடவடிக்கையும் இதற்கு ஒரு காரணம் என்றும் அரசு அதிகாரிகள் பட்டாசு தொழிலாளர்களை துன்புறுத்துவதாக தான் நான் நினைக்கிறேன் இந்தப் பகுதியில் இத் தொழிலை விட்டால் மக்களுக்கு வேறு தொழில் கிடையாது. இதனால் மாநில அரசாங்கம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இதுபோன்ற தொந்தரவுகளை அதிகம் செய்யக்கூடாது என அறிவுறுத்த வேண்டும்.இதுகுறித்து சட்டமன்றத்தில் நான் பேசுவேன் என்றும் இதுபோன்று எதிர்பாராத விதமாக வெடி விபத்து நடக்கும் போது காயம் அடைந்தவர்களை சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டி உள்ளது இது போன்று அவசரமாக செல்லும் நிலையில் சிவகாசியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்ள வேண்டிய சூழ்நிலையும் உள்ளது அதனால் வெம்பக்கோட்டை பகுதியிலேயே சிகிச்சைக்காக ஒரு மருத்துவமனையை கொண்டு வர நான் முயற்சிப்பேன் குரல் கொடுப்பேன் என்றார். அரசு அதிகாரிகள் பட்டாசு ஆலை தொழிலாளர்களை நிம்மதியாக வேலை பார்க்க விட வேண்டும் ஆலை உரிமையாளர்களையோ தொழிலாளர்களையோ விரைவு படுத்த அவர்களை இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளக்கூடாது அரசு இதில் தனி கவனம் செலுத்த வேண்டும் பாதிக்கப்பட்டவர்களுக்கு பத்து லட்சம் ரூபாய் ஆவது நிதி உதவி வழங்க வேண்டும். இதற்காக சட்டமன்றத்தில் நான் நிச்சயம் குரல் கொடுப்பேன் என்றும் முதல் வருடம் கூறி கண்டிப்பாக உரிய நிதி உதவியை பெற்றுக் கொடுப்பேன் சாத்தூர் தொகுதியை பொருத்தமல்லி சபிக்கப்பட்ட தொகுதியாக தான் நான் நினைக்கிறேன். நான் வந்தபோது மிக மோசமாக இருந்ததை உணர்ந்தேன் குடிப்பதற்கு சுத்தமான குடிநீர் இல்லை சாலை வசதி இல்லை கிராமங்களுக்கு பேருந்து வசதி இல்லை இந்த நேரத்தில் அரசை நான் குற்றம் சாட்ட விரும்பவில்லை வரும் காலத்தில் என்ன தேவையோ அதை செய்து கொடுப்பேன் என்றார்.

ALSO READ:  T20 WC 2026: அரையிறுதிப் போட்டிகள் எப்படி?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

விஜயின் வெற்றி – அதிர்ஷ்டமா? ஆளுமையா?

இலங்கை ஜெயராஜ் - இலக்கியப் பேச்சாளர்கேள்வி: விஜய்யின் தேர்தல் வெற்றியினைப் பார்த்தீர்களா?...

செங்கோட்டை – பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

பெங்களூரு-செங்கோட்டை - பெங்களூரு கன்டோன்மென்ட் இடையே ஒரு வழி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்!

Topics

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

விஜயின் வெற்றி – அதிர்ஷ்டமா? ஆளுமையா?

இலங்கை ஜெயராஜ் - இலக்கியப் பேச்சாளர்கேள்வி: விஜய்யின் தேர்தல் வெற்றியினைப் பார்த்தீர்களா?...

செங்கோட்டை – பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

பெங்களூரு-செங்கோட்டை - பெங்களூரு கன்டோன்மென்ட் இடையே ஒரு வழி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்!

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

சுதர்சன் ஜி தான் அருணாச்சல பிரதேசத்துக்கு வந்த முதல் சர்சங்கசாலக். 2007 ல் அவர் அந்த மாநிலத்திற்கு விஜயம் செய்தார் . 2011 ல் முதன்முதலாக அந்த மாநிலத்தில் சங்க சிக்ஷா வர்க எனப்படும் இருபது நாட்கள் நடைபெறும் பயிற்சி முகாம் நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அதில் பயிற்சி பெற்றனர்.

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அஸ்ஸாம்

அஸ்ஸாமில் ஆர் எஸ் எஸ் கிளைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று அந்த அமைப்பின் ஆண்டறிக்கை கூறுகிறது. வித்யா பாரதி மூலமாக அந்த மாநிலத்தில் 121 ஆரம்ப பள்ளிகளும் 115 நடுநிலைப் பள்ளிகளும் 341 மேல்நிலைப் பள்ளிகளும் நடத்தப்படுகின்றன. சுமார் இரண்டு லட்சம் மாணவர்கள் இதன்மூலம் பயன் பெறுகின்றனர்.

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : நாகாலாந்து

முன்பெல்லாம், அனேகமாக, எல்லோரும் பிரிவினை பேசுவார்கள். இப்போது வெகுவாக குறைந்துவிட்டது. பிரிவினைவாதத்தை எதிர்த்து பேசாமல் இருக்க காரணம் பிரிவினைவாதிகளிடம் இருக்கும் துப்பாக்கிதான். தேசியம், தேசபக்தி வளர்ந்து விட்டது என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் யாரும் சீனாவுடனோ பங்களாதேஷுடனோ இணைவதை விரும்பவில்லை

Entertainment News

Popular Categories