உச்ச நீதிமன்றத்தால் ஆன புண்ணியம்… பட்டாசு விற்பனையாகாமல் தேக்கம்!

crackers - 2026

உச்சநீதிமன்றம் விதித்த கட்டுப்பாடுகளால் பட்டாசுகள் விற்பனையாகாமல் தேக்கம் அடைந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். வெடிகள் வெடிப்பதற்கு உச்ச நீதிமன்றம் விதித்த கட்டுப்பாடுகளால் 75 சதவீத வெடிகள் விற்பனை ஆகாமல் தேங்கியதாக விற்பனையாளர்கள் கூறியுள்ளனர்.

தீபாவளி அன்று நிர்ணயிக்கப்பட்ட 2 மணி நேரத்தில் மட்டுமே வெடி வெடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் நேரக் கட்டுப்பாடு விதித்தது. மேலும், அதிக மாசு வெளியிடக் கூடிய மற்றும் அதிக சத்தத்தை எழுப்பும் வெடிகளை வெடிக்கக் கூடாது என்று கூறியது.

வழக்கமாக சென்னையில் தீவுத்திடல், நந்தனம், கிழக்குக் கடற்கரைச் சாலை, ராயப்பேட்டை ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள விற்பனை மையங்களில் அதிக அளவு விற்பனை இருக்கும். ஆனால் இந்த முறை, 25 சதவீத அளவே வெடிகள் விற்பனை ஆனதாம். 75 சதவீத வெடிகள் தேங்கின என்று விற்பனையாளர்கள் கூறுகின்றனர். கடந்த ஆண்டை ஒப்பிடும் போது இந்த ஆண்டு 30 சதவீத வெடிகள் தான் விற்பனை ஆயினவாம். மீதம் 70 சதவீத வெடிகள் தேங்கிக் கிடக்கின்றன.

வெடிகள் தயாரிப்பு பெரும்பான்மையாக நடக்கும் விருதுநகர் மாவட்டத்தை அடுத்த மதுரை மாவட்டத்தில், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பாதிக்கும் குறைவாகவே விற்பனை இருந்துள்ளது. மத்தாப்பு, புஸ்வாணம் போன்ற ஒளிரும் வெடிபொருள்களே விற்பனை ஆயினவாம். அதிக சத்தம் எழுப்பும் வெடிகளின் விற்பனை குறைந்துள்ளதாக வணிகர்கள் கூறியுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெடிகள் விற்பனை கடந்த ஆண்டை விட 90 சதவீதம் குறைந்துள்ளது என்று வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், வெடி தயாரிப்புத் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள், வணிகர்களின் நலனைக் கருத்தில் கொண்டு வெடி வெடிக்க விதித்துள்ள கட்டுப்பாட்டை தளர்த்த வேண்டும் என்று விருதுநகர் வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

அது என்ன, திமுக தலைவர்கள் மட்டும் சாதாரண பொதுமக்களை அன்பாகத் தட்டிக் கொடுக்கும்போதெல்லாம், முகத்தை அப்படி கோபமாக வைத்துக் கொள்கிறீர்கள்?

Topics

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

அது என்ன, திமுக தலைவர்கள் மட்டும் சாதாரண பொதுமக்களை அன்பாகத் தட்டிக் கொடுக்கும்போதெல்லாம், முகத்தை அப்படி கோபமாக வைத்துக் கொள்கிறீர்கள்?

தமிழகத்தில் இருந்த நாட்கள் பொற்கால நாட்கள்: ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்!

தமிழக மக்களுடன் கலந்து பழகிய 54 மாதங்கள் தம் வாழ்வின் பொற்கால நாட்கள் என்று தமிழக ஆளுநர் ஆர்என். ரவி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

இக்கணம் – தேவை சிக்கனம்!

மத்திய கிழக்கில் போர் ஏற்பட்டதில் இருந்தே உலகின் பல நாடுகளிலும் பெட்ரோல் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட தொடங்கியது…

பஞ்சாங்கம் மார்ச் 10 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories