உச்ச நீதிமன்றத்தால் ஆன புண்ணியம்… பட்டாசு விற்பனையாகாமல் தேக்கம்!

crackers - 2026

உச்சநீதிமன்றம் விதித்த கட்டுப்பாடுகளால் பட்டாசுகள் விற்பனையாகாமல் தேக்கம் அடைந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். வெடிகள் வெடிப்பதற்கு உச்ச நீதிமன்றம் விதித்த கட்டுப்பாடுகளால் 75 சதவீத வெடிகள் விற்பனை ஆகாமல் தேங்கியதாக விற்பனையாளர்கள் கூறியுள்ளனர்.

தீபாவளி அன்று நிர்ணயிக்கப்பட்ட 2 மணி நேரத்தில் மட்டுமே வெடி வெடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் நேரக் கட்டுப்பாடு விதித்தது. மேலும், அதிக மாசு வெளியிடக் கூடிய மற்றும் அதிக சத்தத்தை எழுப்பும் வெடிகளை வெடிக்கக் கூடாது என்று கூறியது.

வழக்கமாக சென்னையில் தீவுத்திடல், நந்தனம், கிழக்குக் கடற்கரைச் சாலை, ராயப்பேட்டை ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள விற்பனை மையங்களில் அதிக அளவு விற்பனை இருக்கும். ஆனால் இந்த முறை, 25 சதவீத அளவே வெடிகள் விற்பனை ஆனதாம். 75 சதவீத வெடிகள் தேங்கின என்று விற்பனையாளர்கள் கூறுகின்றனர். கடந்த ஆண்டை ஒப்பிடும் போது இந்த ஆண்டு 30 சதவீத வெடிகள் தான் விற்பனை ஆயினவாம். மீதம் 70 சதவீத வெடிகள் தேங்கிக் கிடக்கின்றன.

வெடிகள் தயாரிப்பு பெரும்பான்மையாக நடக்கும் விருதுநகர் மாவட்டத்தை அடுத்த மதுரை மாவட்டத்தில், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பாதிக்கும் குறைவாகவே விற்பனை இருந்துள்ளது. மத்தாப்பு, புஸ்வாணம் போன்ற ஒளிரும் வெடிபொருள்களே விற்பனை ஆயினவாம். அதிக சத்தம் எழுப்பும் வெடிகளின் விற்பனை குறைந்துள்ளதாக வணிகர்கள் கூறியுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெடிகள் விற்பனை கடந்த ஆண்டை விட 90 சதவீதம் குறைந்துள்ளது என்று வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், வெடி தயாரிப்புத் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள், வணிகர்களின் நலனைக் கருத்தில் கொண்டு வெடி வெடிக்க விதித்துள்ள கட்டுப்பாட்டை தளர்த்த வேண்டும் என்று விருதுநகர் வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories