28-03-2023 8:20 PM
More
    Homeசற்றுமுன்கன்னியாகுமரி வரும் மோடி! பாஜக., தொண்டர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

    To Read in other Indian Languages…

    கன்னியாகுமரி வரும் மோடி! பாஜக., தொண்டர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

    modi app - Dhinasari Tamil

    இன்று கன்னியாகுமரிக்கு வருகிறார் பிரதமர் மோடி. அவர் வருகைக்கு மதிமுக.,வினர் எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி காட்டுவோம் என்று அறிவித்துள்ள நிலையில், அங்கே பாஜக., தொண்டர்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் போலீஸாருக்கும் பாஜக.,வினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    கன்னியாகுமரிக்குச் செல்லும் முதல்கட்ட நுழைவான ஆரல்வாய்மொழியில் பாஜக.,வினர் ஏராளமானோர் திரண்டதால் அவர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இந்நிலையில், மீண்டும் டிவிட்டரில் கோபேக் மோடி ஹேஷ்டாக்கை திமுக.,வினர் டிரெண்ட் ஆக்கி வருகின்றனர்.

    மோடியின் வருகைக்கு எதிராக திமுக.,வின் ஐ.டி.பிரிவினர் முழு நேரத் தொழிலாக இதனைத் தொடர்ந்து செய்து வருகின்றனர். மதிமுக.,வினர் முழூ நேரத் தொழிலாக கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.

    bjp kumari - Dhinasari Tamil

    இந்நிலையில் எதிர்ப்புகளைக் கடந்து ரூ.40,000 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி இன்று கன்னியாகுமரி வருகிறார். இதனை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    தில்லியில் இருந்து தனி விமானம் மூலம் திருவனந்தபுரம் வரும் மோடி, அங்கிருந்து பிற்பகல் 2.30 மணி அளவில் ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைக்கு வருகிறார்.

    பின்னர் அங்கிருந்து கார் மூலம் நிகழ்ச்சி நடைபெறும் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரி மைதானத்திற்கு செல்கிறார்.

    இந்த விழாவில் மதுரை – சென்னை எழும்பூர் இடையிலான தேஜஸ் ரயில் சேவையை காணொளிக் காட்சி மூலம் பிரதமர் தொடங்கி வைக்கிறார். இந்த அதி நவீன ரயில் மதுரையில் இருந்து ஆறரை மணி நேரத்தில் எழும்பூரைச் சென்றடையும். ஜிபிஎஸ், தானியங்கி கதவுகள், கண்காணிப்பு கேமரா, பயோ கழிவறைகள் போன்ற பல்வேறு நவீன வசதிகள் இந்த ரயிலில் இடம் பெற்றுள்ளன.

    மேலும், ராமேஸ்வரம் – தனுஷ்கோடி இடையே ரூ.208 கோடி செலவில் புதிய ரயில்பாதை மற்றும் பாம்பனில் ரூ.250 கோடி செலவில் ரயில் சேவைக்காக புதிய பாலம் கட்டுவதற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.

    மதுரை – செட்டிகுளம், செட்டிகுளம் – நத்தம் நான்கு வழிச்சாலை திட்டத்திற்கு அடிக்கல், மதுரை – ராமநாதபுரம் நான்குவழிச்சாலையை நாட்டுக்கு அர்ப்பணித்தல் உள்ளிட்ட ரூ.40,000 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்க இருக்கிறார்.

    இந்நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிசாமி, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    3 × 2 =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Most Popular

    மக்கள் பேசிக்கிறாங்க

    ஆன்மிகம்..!

    Follow Dhinasari on Social Media

    19,033FansLike
    388FollowersFollow
    83FollowersFollow
    74FollowersFollow
    4,634FollowersFollow
    17,300SubscribersSubscribe

    சமையல் புதிது..!

    COMPLAINT BOX | புகார் பெட்டி :

    Cinema / Entertainment

    நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்ரமணியம் மறைவு..

    நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்ரமணியம் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகர் அஜித்குமாரின்...

    லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை..

    திருவண்ணாமலையில் நேற்று படமாக்கப்பட்ட லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை எதிரொலி ஐஸ்வர்யா ரஜினிகாந்தின்...

    கண்ணை நம்பாதே-படம் எப்படி?..

    அவரவர் குற்றத்திற்கு தண்டனை உண்டு என்கிற கருவை அடிப்படையாக் கொண்டு உருவான படம் கண்ணை நம்பாதே. தான்...

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once..

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once திரைப்படம் .சிறந்த...

    Latest News : Read Now...