தமிழகத்தில் வாக்குப் பதிவு நாள் மாற்றப் பட வேண்டும்! எழும் கோரிக்கைகள்!

election commission - 2026

நேற்று தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவித்த இரண்டாம் கட்ட தேர்தல் நாளில், தமிழகத்தில் வாக்குப் பதிவு நடைபெறும் ஏப். 18 அன்று, மதுரை மட்டுமல்ல… நெல்லையிலும் அன்று திருவிழாதான் என்கின்றனர் நெல்லை வாசிகள்.

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நேற்று தேர்தல் தேதிகளை அறிவித்தார். இதில் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் தமிழகத்தில், ஏப். 18 ஆம் தேதி சித்திரா பௌர்ணமி சிறப்பு தினம்! அது தமிழகத்தில் உள்ள ஆன்மிகப் பெருமக்களால் பெரிதும் கொண்டாடப் படுகிறது. அன்றைய நாளில் மதுரையில் சித்திரைத் திருவிழா கோலாகலமாக நடைபெறுகிறது.

லட்சக் கணக்கில் பொதுமக்கள் இந்த விழாவில் கலந்து கொள்வதால், அன்றைய தினம் வாக்குப்பதிவு மந்தமாகவே இருக்கும் என்பது கணிப்பு.

இதனால், பொதுமக்களிடம் இருந்து அரசியல் கட்சிகளிடம் இருந்தும் பெற்ற புகார்களை அடுத்து, தேர்தல் நாளில் திருவிழா வருவதால், இது குறித்து முறையான முன்கூட்டியேயான தகவலை மாவட்ட தேர்தல் அதிகாரியான நடராஜன் அளித்தாரா என்பது குறித்து தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு கேட்டிருக்கிறார்.

தேர்தல் நாள் இது என்று தெரியாத நிலையில், இருப்பினும் மதுரை சித்திரைத் திருவிழா வரும் நாள் என்பதால் தேர்தல் வாக்குப் பதிவு பாதிக்கும், பாதுகாப்புக்கு போலீஸார் பணி அமர்த்தப்பட வேண்டும் என்றெல்லாம் முன்கூட்டியேயான முன்னெச்சரிக்கைத் தகவல்களை அவர் அளித்தாரா என்பது குறித்து கேட்டிருக்கிறார் சத்யபிரதா சாஹூ.

இந்நிலையில், மதுரையில் மட்டும் அல்ல, நெல்லை உள்ளிட்ட தமிழக தலங்களில் அன்றைய தினம் திருவிழா கொண்டாட்டம்தான் என்கின்றனர் பொதுமக்கள். மதுரை அளவுக்கு இல்லாவிட்டாலும், பல பேர் பக்கத்து ஊர்களில் இருந்து திரண்டு வருவார்களே… அன்று அவரவர் மாவட்டங்களில் ஓட்டுப் பதிவு எப்படி இருக்கும் பாதிப்பு இருக்குமா என்று அறிக்கை ஏதும் கேட்டார்களா அல்லது ஆட்சியர் அலுவலகங்களில் இருந்து கொடுத்தார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

நெல்லை மாவட்டத்தில் கடையநல்லூர், கடையம், கல்லிடைக்குறிச்சி, பாப்பான்குளம், என எல்லா தலங்களிலும் சித்திரா பௌர்ணமி விழா நடைபெறுகிறது.. ஏப். 18 இரவு ஏப். 19 காலை சித்ரா பௌர்ணமி என்பதால் பலரும் தங்கள் ஊர்களை விட்டு வேறு இடங்களுக்குச் செல்வார்கள்! இது நிச்சயமாக வாக்குப் பதிவில் சரிவை ஏற்படுத்தும்.

வாக்குப் பதிவு நாளில் தேர்த் திருவிழாவும் மறுநாள் பௌர்ணமி நாளில் ஆராட்டு உத்ஸவங்களும் நடைபெறும் என்கின்றனர் நெல்லை வாழ் பெருமக்கள்.

இதனிடையே, தொடர்ச்சியாக ஐந்து தினங்கள் விடுமுறை என வந்துவிடுவதால், அதாவது முந்தைய புதன், வாக்குப் பதிவு நாளான வியாழன், புனித வெள்ளி, சனி, ஞாயிறு என வந்துவிடுவதால், அதுவும் கூட வாக்குப் பதிவை பாதிக்கும் என்கின்றனர்.

எனவே தேர்தல் நாளை அடுத்த கட்டமாகவோ, அல்லது வேறு நாளிலோ நடத்துவது நல்லது என்ற குரல் தமிழகத்தில் எழுந்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

Topics

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...

Entertainment News

Popular Categories