தமிழகத்தில் வாக்குப் பதிவு நாள் மாற்றப் பட வேண்டும்! எழும் கோரிக்கைகள்!

election commission - 2026

நேற்று தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவித்த இரண்டாம் கட்ட தேர்தல் நாளில், தமிழகத்தில் வாக்குப் பதிவு நடைபெறும் ஏப். 18 அன்று, மதுரை மட்டுமல்ல… நெல்லையிலும் அன்று திருவிழாதான் என்கின்றனர் நெல்லை வாசிகள்.

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நேற்று தேர்தல் தேதிகளை அறிவித்தார். இதில் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் தமிழகத்தில், ஏப். 18 ஆம் தேதி சித்திரா பௌர்ணமி சிறப்பு தினம்! அது தமிழகத்தில் உள்ள ஆன்மிகப் பெருமக்களால் பெரிதும் கொண்டாடப் படுகிறது. அன்றைய நாளில் மதுரையில் சித்திரைத் திருவிழா கோலாகலமாக நடைபெறுகிறது.

லட்சக் கணக்கில் பொதுமக்கள் இந்த விழாவில் கலந்து கொள்வதால், அன்றைய தினம் வாக்குப்பதிவு மந்தமாகவே இருக்கும் என்பது கணிப்பு.

இதனால், பொதுமக்களிடம் இருந்து அரசியல் கட்சிகளிடம் இருந்தும் பெற்ற புகார்களை அடுத்து, தேர்தல் நாளில் திருவிழா வருவதால், இது குறித்து முறையான முன்கூட்டியேயான தகவலை மாவட்ட தேர்தல் அதிகாரியான நடராஜன் அளித்தாரா என்பது குறித்து தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு கேட்டிருக்கிறார்.

ALSO READ:  தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தேர்தல் நாள் இது என்று தெரியாத நிலையில், இருப்பினும் மதுரை சித்திரைத் திருவிழா வரும் நாள் என்பதால் தேர்தல் வாக்குப் பதிவு பாதிக்கும், பாதுகாப்புக்கு போலீஸார் பணி அமர்த்தப்பட வேண்டும் என்றெல்லாம் முன்கூட்டியேயான முன்னெச்சரிக்கைத் தகவல்களை அவர் அளித்தாரா என்பது குறித்து கேட்டிருக்கிறார் சத்யபிரதா சாஹூ.

இந்நிலையில், மதுரையில் மட்டும் அல்ல, நெல்லை உள்ளிட்ட தமிழக தலங்களில் அன்றைய தினம் திருவிழா கொண்டாட்டம்தான் என்கின்றனர் பொதுமக்கள். மதுரை அளவுக்கு இல்லாவிட்டாலும், பல பேர் பக்கத்து ஊர்களில் இருந்து திரண்டு வருவார்களே… அன்று அவரவர் மாவட்டங்களில் ஓட்டுப் பதிவு எப்படி இருக்கும் பாதிப்பு இருக்குமா என்று அறிக்கை ஏதும் கேட்டார்களா அல்லது ஆட்சியர் அலுவலகங்களில் இருந்து கொடுத்தார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

நெல்லை மாவட்டத்தில் கடையநல்லூர், கடையம், கல்லிடைக்குறிச்சி, பாப்பான்குளம், என எல்லா தலங்களிலும் சித்திரா பௌர்ணமி விழா நடைபெறுகிறது.. ஏப். 18 இரவு ஏப். 19 காலை சித்ரா பௌர்ணமி என்பதால் பலரும் தங்கள் ஊர்களை விட்டு வேறு இடங்களுக்குச் செல்வார்கள்! இது நிச்சயமாக வாக்குப் பதிவில் சரிவை ஏற்படுத்தும்.

ALSO READ:  ஒரு விருது அறிவிப்பு; சரித்திரம் கண்டிராத சர்ச்சை!

வாக்குப் பதிவு நாளில் தேர்த் திருவிழாவும் மறுநாள் பௌர்ணமி நாளில் ஆராட்டு உத்ஸவங்களும் நடைபெறும் என்கின்றனர் நெல்லை வாழ் பெருமக்கள்.

இதனிடையே, தொடர்ச்சியாக ஐந்து தினங்கள் விடுமுறை என வந்துவிடுவதால், அதாவது முந்தைய புதன், வாக்குப் பதிவு நாளான வியாழன், புனித வெள்ளி, சனி, ஞாயிறு என வந்துவிடுவதால், அதுவும் கூட வாக்குப் பதிவை பாதிக்கும் என்கின்றனர்.

எனவே தேர்தல் நாளை அடுத்த கட்டமாகவோ, அல்லது வேறு நாளிலோ நடத்துவது நல்லது என்ற குரல் தமிழகத்தில் எழுந்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

சாதனை நாயகர் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து  வருகின்றனர்.

பஞ்சாங்கம் – ஜூன் 10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட்முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்இந்திய அணி முதல்...

முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

அனைவரின் நன்மைக்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் பாடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே ஒட்டுமொத்த நாடும் செழிப்படைந்து முழுமையான வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டுமானால்  ஆட்சி நிர்வாகம் சனாதன தர்மத்தின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும்.

Topics

சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

சாதனை நாயகர் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து  வருகின்றனர்.

பஞ்சாங்கம் – ஜூன் 10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட்முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்இந்திய அணி முதல்...

முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

அனைவரின் நன்மைக்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் பாடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே ஒட்டுமொத்த நாடும் செழிப்படைந்து முழுமையான வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டுமானால்  ஆட்சி நிர்வாகம் சனாதன தர்மத்தின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும்.

பஞ்சாங்கம் ஜூன் 8 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.

வெல்டன் அமித்ஷா… வாழ்த்துகள் அண்ணாமலை!

மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்ற இந்திய தேசியத்தின் அடிப்படை. பாரதிய ஜனதா கட்சியில் அதை நடைமுறைப்படுத்துவதில் எழுந்த சிக்கலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இது.

Entertainment News

Popular Categories