திருச்சி, மதுரை, வேலூரில் 102 டிகிரி வெயில்

Published:

சென்னை: தமிழகத்தில் திருச்சி, மதுரை, வேலூரில் அதிகபட்சமாக 102 டிகிரி ஃபாரன் ஹீட் அளவுக்கு வெப்பம் பதிவாகியுள்ளது. ஐந்து நகரங்களில் அதிகபட்சமாக சனிக்கிழமை நேற்று 100 டிகிரி ஃபாரன்ஹீட்டும் மேல் வெப்பம் பதிவாகியுள்ளது. இதனை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியது… தமிழகத்தில் அதிகபட்சமாக சனிக்கிழமையன்று 5 நகரங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியுள்ளது. இவற்றில் திருச்சி, மதுரை, வேலூரில் தலா 102 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெயிலின் தாக்கம் காணப்பட்டது. அதற்கு அடுத்தப்படியாக, திருப்பத்தூர், கரூர் பரமத்தியில் தலா 101 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெயிலின் தாக்கம் இருந்தது. மற்ற மாவட்டங்களைப் பொருத்தமட்டில் பெரும்பாலும் 88 முதல் 95 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெப்பம் நிலவியது. சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாநகரின் குறைந்தபட்ச, அதிகபட்ச வெப்பநிலை முறையே 81, 93 டிகிரி ஃபாரன்ஹீட்டாக இருக்கும் என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர். சனிக்கிழமை பதிவான வெயில் அளவு (ஃபாரன்ஹீட்டில்) வேலூர் 102 மதுரை 102 திருச்சி 102 திருப்பத்தூர் 101 கரூர் பரமத்தி 101 சேலம் 99 தர்மபுரி 99 பாளையங்கோட்டை 99 கோவை 97 சென்னை 95

ALSO READ:  சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

Related articles

Recent articles

spot_img