கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள குரங்குக்கல் மேடு பகுதி ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் காரில் பயணம் செய்து கொண்டிருந்தனர். சாலையில் சென்று கொண்டிருந்த கார் எதிர்பாராத விதமாக அங்கிருந்த ஆலமரம் மீது திடீரென மோதி விபத்துக்குள்ளானது. காரில் திருப்பத்தூர் அடுத்துள்ள ஓமகுப்பம் பகுதியை சேர்ந்த திலீப் பலத்த காயமடைந்தார்,வில்லியம்ஸ், ஜெரினிமேரி, ஜொயல், ஜெயந்த், சுசிலா, செல்வி, ஜொன்ஸ்,திலீப் மனைவி, இரண்டு குழந்தைகள் மற்றும் இவரது தாய் உள்பட ஏழு பேர் பலியாகினர். இவர்கள் அனைவரும் சமீபத்தில் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியுள்ளனர். இன்று சர்ச்சில் ஞானஸ்நானம் பெறுவதற்காக கீழ்பென்னாத்தூர் சென்ற பொழுது இவர்களது கார் விபத்துக்குள்ளாகியுள்ளது.
கிருஷ்ணகிரி அருகே சாலைவிபத்தில் 7 பேர் பலி
Popular Categories


