December 6, 2025, 3:29 AM
24.9 C
Chennai

வாக்கு சேகரிப்பை எதிர்த்த மசூதிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்க: இந்து மக்கள் கட்சி புகார்!

arjun sampath vellore - 2025

மதுரை, கும்பகோணம் மசூதிகளுக்கு வெளியே வாக்குச் சேகரிக்க சென்ற அ.தி.மு.க. அமைச்சர்களுக்கும், வேட்பாளர்களுக்கும் எதிர்ப்பு  தெரிவிக்கப் பட்டது தொடர்பில், சம்மந்தப்பட்ட மசூதிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், அ.திமு.க வேட்பாளர்களின் வாக்குச்சேகரிக்கும் உரிமையை நிலைநாட்ட வேண்டியும் இந்து மக்கள் கட்சி சார்பில் புகார் மனு அளிக்கப் பட்டுள்ளது.

இந்திய தேர்தல் ஆணைய சென்னை அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் மதுரை மாவட்ட தலைவர் சோலைக்கண்ணன் பெயரில் இந்தக் கோரிக்கை புகார் மனு அளிக்கப் பட்டது.  அதில்….

மதிப்பிற்குரிய இந்திய நாடாளுமன்ற தேர்தல் அதிகாரி – 2019 அவர்களுக்கு வணக்கம்!

மதுரை மாநகரத்தில் உள்ள பிரபலமான மசூதியில் தொழுகை முடிந்து வெளியே வருபவர்களிடம் அனைத்து கட்சியினரும், வேட்பாளர்களும் வாக்குச் சேகரிக்கின்றனர். ஆனால் மதுரை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகின்ற அ.தி.மு.க வேட்பாளருக்கு மட்டும் அனுமதி மறுத்து எதிர்ப்பு தெரிவிப்பதோடு, மசூதியில் தொழுகையின் போது அ.தி.மு.க மற்றும் தமிழக அரசுக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரத்தையும், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும் அவதூறு பிரச்சாரத்தையும் பகிரங்கமாக மசூதியில் தொழுகை கூட்டங்களில் செய்கிறார்கள்.

மேற்கண்ட மசூதியின் நிர்வாகம் மத அடிப்படைவாதிகளின் பிடியில் சென்று விட்டது. தொழுகை, வழிபாடு போன்ற ஆன்மீக விஷயங்களை தாண்டி சட்ட விரோதமாக அரசியல் மேடையாக மசூதியின் தொழுகை கூட்டங்களை மாற்றி வருகின்றார்கள். இதன் காரணமாகத் தான் வாக்குச் சேகரிக்க சென்ற அதிமுக வேட்பாளரும் அமைச்சர் செல்லூர் ராஜ் அவர்களும், திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

அதிமுக-விலும் ஏராளமான முஸ்லீம்கள் அங்கத்தினர்களாக உள்ளனர். ஆனால் மசூதி நிர்வாகம் அ.தி.மு.க வேட்பாளரை திருப்பி அனுப்பி உள்ளது. இதன் காரணமாக அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்குச் சேகரிக்கும் உரிமை மறுக்கப்பட்டுள்ளது. இது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானதாகும். சட்டப்படி குற்றமாகும்.

இதே போல கும்பகோணம் மசூதிக்கு வெளியில் வாக்குச் சேகரிக்கச் சென்ற அதிமுக அமைச்சர் கடும் எதிர்ப்பை சந்திக்க நேர்ந்தது. அதிமுக கூட்டணி கட்சியினர் அங்கு நின்று கொண்டிருக்கும் போதே மசூதி ஒலிபெருக்கியில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும், தமிழக முதல்வர் எடப்பாடிக்கு எதிராகவும் வெறுப்பு பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளது.

இத்தகைய சூழ்நிலை தமிழகத்தில் உள்ள அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளிலும், ஒரு சில மசூதிகளில் நடைபெற்று வருகிறது. சம்மந்தப்பட்ட அரசியல் கட்சியும் இது குறித்து நேரடியாக புகார் செய்யவில்லை.

மத அடிப்படைவாதிகளின் பிடியில் சிக்கியுள்ள இத்தகைய மசூதிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். தேர்தல் ஆணையம் இது குறித்து வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்… என்று புகார் மனுவில் குறிப்பிடப் பட்டுள்ளதாக இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தகவல் வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories