நாங்கள் இந்துக்கள், திமுக., கூட்டணியில் எவரும் வோட்டு கேட்டு எங்கள் வீட்டுக்கு வர வேண்டாம் என்று திமுக கூட்டணிக்கு பகிரங்க அறிவிப்புகளை பொதுமக்களில் பலர் செய்து வருகின்றனர்
இது ஐயப்ப பக்தர்கள் குடியிருக்கும் வீடு; திமுக கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு வோட்டு கேட்டு இங்கே வர வேண்டாம் என்ற நோட்டீசை திருப்பூரில் பக்தர்கள் தங்களது வீடுகளின் முன் ஒட்டி வருகின்றனர்
இதேபோல் பல்வேறு இடங்களிலும் அவரவர் தங்கள் வீடுகளில் வோட்டு கேட்டு வர வேண்டாம் என்று எழுதி ஒட்டி ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது. இதையடுத்து கேரளா உள்பட தமிழகம் மற்றும் தென் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் எதிர்ப்புகள் வெடித்தன கேரளாவில் பல்வேறு அமைப்புகள் இந்து அமைப்பினர் பொதுமக்களை திரட்டி போராட்டங்களை நடத்தினர்
இந்த விவகாரத்தில் கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது
தற்போது ஐயப்பன் கோயில் விவகாரத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது தமிழக மக்கள் தங்கள் எதிர்ப்புகளை காட்டத் தொடங்கியுள்ளனர்
கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடந்ததை நினைவூட்டி போஸ்டர்கள் நோட்டீஸ் கொட்டியுள்ளனர் அதேபோல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் திமுக காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கூட்டணியினர் எங்களிடம் ஓட்டு கேட்டு வீட்டுக்கு வராதீர்கள் என்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்
திருப்பூர் சாமுண்டிபுரம் வளையங்கள் உட்பட சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பல்வேறு வீடுகளிலும் ஐயப்ப பக்தர்கள் இருக்கும் வீடு திமுக கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஓட்டு கேட்டு வர வேண்டாம் என நோட்டீஸ் அடித்து ஒட்டியுள்ளனர் இது திமுக கூட்டணியினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது