ஃபானி புயல் அச்சுறுத்தல் காரணமாக, கோடைக்கால வகுப்புகள் ரத்து என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்பகுதியை நெருங்க இருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையத்தின் இந்த அறிவுறுத்தலை தொடர்ந்து, புதுச்சேரி அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஜவஹர் பால்பவனில் நடைபெறும் கோடைக்கால சிறப்பு பயிற்சி வகுப்புகள் அனைத்தும் வரும் மே 2 ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.



