பானையிலே சோறிருந்தா பூனைகளும் சொந்தமடா
சோதனையைப் பங்கு வைச்சா சொந்தமில்லே பந்தமில்லே..
இம்ரான்கான் நிலைமையைப் பார்க்கும்போது இந்தப் பாடல்வரிகள்தான் ஞாபகத்துக்கு வருது. மனுஷன் என்னதான் பண்ணுவார்? என்னதான் பண்ண முடியும்?
தக்காளி பாகிஸ்தான்ல ஒரு கிலோ 250 ரூபாய்க்கு விக்குதாம். பெட்ரோல் டீஸல் விலை கேட்கவே வேண்டாம்.
ட்ரம்ப் என்னடான்னா, வாஷிங்டன் பக்கமே வராதேன்னு சொல்லிட்டாரு. சீனாவுக்குப் போனா, ஒரு பெரிய தேசத்தோட பிரதமரை வரவேற்க ஒரு கார்ப்பரேஷன் அதிகாரி வர்றாரு! இதெல்லாம் காறித்துப்புறதுக்கு சமானம்.
கடன் கொடுத்தவங்கல்லாம் ‘கையில காசு வாயிலே தோசை’ன்னு கண்டிப்பா சொல்லியாச்சு. சீனாவும் கடன் தர்றதைப் பத்தியெல்லாம் அப்பாலிக்கா பேசுவோம். வட்டியை எப்போ நைனா தரப்போறேன்னு கழுத்துல துண்டைப் போட்டுக் கேட்க ஆரம்பிச்சிட்டான். ஒரு முக்கியமான துறைமுகம் சீனா கைக்குப் போகப்போவுது. CPEC-க்குக் கொடுத்த கடனையெல்லாம் முதலீடாக (Equity) மாத்திக்கொடுன்னு ஒத்தக்காலுல நிக்கிறான் சீனாக்காரன்.
உலகப் பொருளாதார நிபுணர்களெல்லாம் ‘பாகிஸ்தான் ரூபாயோட மதிப்பைக் குறைக்கிறதைத் தவிர வேற வழியே இல்லை,’னு சொல்லிட்டாங்க. 1991-ல இந்தியா இதே மாதிரி சூழலில் இருந்தப்போ என்ன பண்ணினாங்கன்னு ஆராய்ச்சி பண்ணி, அதையெல்லாம் இப்ப பாகிஸ்தான்ல பண்றதுக்கு முயற்சி பண்ணிட்டிருக்காங்க. உதாரணம், பார்டிசிபேட்டரி நோட்ஸ். இந்தியாவுல கறுப்புப்பணம் அதிகரிக்கவும், சட்டவிரோதமான பணம் இந்தியாவுக்குள்ளே முதலீடா வர்றதுக்கும் காரணமாயிருந்ததும் இந்த எழவெடுத்த பார்டிசிபேட்டரி நோட்ஸ்தான். ஆனா, எதைத் தின்னா பித்தம் தெளியும்னுற நிலைமைக்குப் பாகிஸ்தான் வந்தாச்சு..
’காஷ்மீரை மறந்திட்டு, இந்தியா கிட்டே போயி, அவங்க எப்படி உலகத்துல 6-வது இடத்துக்கு வந்திருக்காங்கன்னு கேளுங்க,’ன்னு டிவியிலே ஷொட்டு வைக்கிறாங்க.
‘சும்மா சும்மா இந்தியா கூட நம்ம நாட்டை ஒப்பிடாதீங்க. முதல்லே நேபாளம், அப்புறம் பங்களாதேஷ் அளவுக்கு வளர்ந்திட்டு அதுக்கப்புறம் இந்தியாவோட நம்மளை ஒப்பிடலாம்,’னு அங்கிருக்கிற பொருள்விளங்கா உருண்டைகள் டிவியிலே கலாய்க்கிறாங்க.
மோடிஜி வேற சும்மாயிருக்காம, சுஷ்மா ஸ்வராஜை விட்டு எல்லாருக்கும் லெட்டர் போட்டுக்கிட்டிருக்காரு. ‘இந்தாளுக்குக் கடன்கொடுத்துட்டு அப்பால அல்லாடாதீங்க,’ன்னு IMF-க்கு டெல்லி லெட்டர் போட்டாச்சு.
சாவப்போற நேரத்துல சங்கரா சங்கரான்னுறா மாதிரி இப்ப இம்ரான்கான் ‘ஆமாங்கோ, தெரியாத்தனமா இங்கன தீவிரவாதத்தை வளர்த்து விட்டுப்புட்டோம்,’னு ஒப்புதல் கொடுத்திருக்காரு. இதை ஐ.எஸ்.ஐயும் ராணுவமும் கேட்டுக்கிட்டு பல்லை நறநறன்னு கடிச்சிட்டிருக்கும். சரியான நேரம் பார்த்து அரசையே கவிழ்த்தாலும் கவிழ்த்திருவானுங்க.
இதே இம்ரான்கான் தேர்தல் பிரச்சாரத்தின்போது ‘ நாம எதுக்குக் கடன் வாங்கணும்? என்ன வளம் இல்லை இந்த பாகிஸ்தானில்? நாம உலகத்துக்கே கடன் கொடுப்போம்.’னெல்லாம் டயலாக் பேசினாரு. ஆனா, இன்னிக்கு பாகிஸ்தான் திவாலாப் போறதுக்கு ரொம்ப கிட்ட வந்தாச்சு.
பாகிஸ்தானைப் பார்த்து இந்தியா கத்துக்க வேண்டிய முக்கியமான பாடம் ரெண்டு இருக்கு.
- தீவிரவாதத்தை முளையிலேயே கிள்ளி எறியணும்.
- அரசியலுக்கு சம்பந்தமில்லாத துறையிலே வெற்றி அடைஞ்சவங்களை நம்பி ஆட்சிப் பொறுப்பை ஒப்படைச்சா, அப்புறம் சிங்கியடிச்சிட்டு இருக்க வேண்டியதுதான்.
புரிஞ்சுக்கிட்டா பொழச்சுக்கலாம். அம்புட்டுத்தேன்.
– யாரோ


