இலங்கை பிரதமர் வீடு அருகே வெடிகுண்டு! தற்கொலைப் படையினருடன் துப்பாக்கிச்சூடு!

ranil wikramasenge maithrepala sirisena - 2026

இலங்கை பிரதமர் ரணிலின் வீடு அருகே தற்கொலைப் படைத் தாக்குதலுக்கான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இலங்கை அலரி பகுதியில் உள்ள ரணில் வீட்டுக்கு அருகே ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதையடுத்து மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரணிலின் வீட்டை சுற்றி போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது.

இலங்கையின் அம்பாறை, சம்மாந்துறை ஆகிய பகுதிகளில் போலீசார் நடத்திய சோதனையில் வெடிகுண்டு தயாரிக்கும் மூலப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் டெட்டனேட்டர்கள் மற்றும் எலக்ட்ரானிக் பொருள்களையும் பறிமுதல் செய்தனர்.

இதனிடையே கல்முனை- சாய்ந்த மருது பகுதியில் தேடுதல் வேட்டையின் போது துப்பாக்கிச்சூடு நடநததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கல்முனை, சாய்ந்தமருது பகுதியில் போலீசார் சந்தேகத்துக்கு இடமான நபர்களை சுற்றி வளைத்தனர். அப்போது அந்தக் குழுவினருக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

அப்போது அந்தப் பகுதியில் 3 பெரும் வெடிச்சத்தங்கள் கேட்டதாகவும், இது தற்கொலை குண்டுத் தாக்குதலாக இருக்கலாம் என்றும் போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

தற்கொலை குண்டுத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்படும் அங்கிகள் தயாரிக்கப்படுவதாக கிடைத்த ரகசியத் தகவலை அடுத்து, அங்கே ராணுவம் மற்றும் போலீஸின் சிறப்பு அதிரடிப் படையினர் சுற்றி வளைத்துள்ளனர். அப்போது அந்தக் குழுவினருடன் இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றதாக போலீஸ் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

மேலும், சம்மாந்துறை சென்னல் கிராமத்தில் மேற்கொள்ளப் பட்ட சோதனை நடவடிக்கையின்போது தற்கொலை அங்கி, வெடிபொருட்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் கொடிகள் உட்பட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இது தொடர்பாக, 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை போலீஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories