இலங்கையில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு!

Published:

srilanka parliament - 2026

இலங்கையில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. மறு அறிவித்தல் வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என்று இலங்கை அரசுத் தரப்பு தெரிவித்துள்ளது.

கல்முனை, சம்மாந்துறை, சவளக்கடை ஆகிய காவல் பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு உடனே அமலுக்கு வந்துள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை இந்தப் பகுதிகளில் ஊரடங்குச்சட்டம் அமலில் இருக்கும் என்று காவல் துறை தொடர்பாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

முன்னதாக இலங்கையில் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை ஊரடங்குச் சட்டம் அமலில் இருக்கும் என்று முதலில் தகவல் வெளியானது.

Related articles

Recent articles

spot_img