வாக்குக்கு பணம் கொடுக்க மாட்டேன்: பரிக்கல் கோயிலில் விஜயகாந்த் வாக்குறுதி

Published:

உளுந்தூர்பேட்டை:

உளுந்தூர்பேட்டை தொகுதி வேட்பாளரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த், அப்பகுதி கோயிலில் வழிபாடு செய்து வாக்குக்காக பொதுமக்களுக்கு பணம் கொடுக்க மாட்டேன் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

உளுந்தூர்பேட்டை வட்டம், உளுந்தாண்டார் கோயில் மற்றும் பரிக்கல் கிராமத்தில் உள்ள ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோயிலுக்கு தேமுதிக தலைவரும், முதலமைச்சர் வேட்பாளருமான விஜயகாந்த், மனைவி பிரேமலதாவுடன் செவ்வாய்க்கிழமை வந்தார்.

தேர்தலில் வெற்றி பெற வேண்டி சிறப்பு வழிபாடு செய்தார். பரிக்கல் லட்சுமி நரசிம்மர் கோயிலில் வழிபாடு நடத்திய பிறகு, வாக்குக்காக பொதுமக்களுக்கு பணம் கொடுக்க மாட்டேன் என்று விஜயகாந்த் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

Related articles

Recent articles

spot_img