December 6, 2025, 2:14 PM
29 C
Chennai

மிஸ் சௌத் இண்டியா அழகிப் பட்டம் பறிப்பு! சிக்கலில் நடிகை மீரா மிதுன்!

Meera Mithun 8 - 2025மிஸ் சௌத் இந்தியா என்ற அழகிப் பட்டத்தை தவறாகப் பயன்படுத்தி முறைகேடு செய்ததால், அழகிப் பட்டத்தை திரும்பப் பெறுவதாக மிஸ் சவுத் இந்தியா அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், மிஸ் சௌத் இந்தியா பட்டத்தை எங்கும் பயன்படுத்தக் கூடாது என்றும் கட்டுப்பாடு விதிக்கப் பட்டுள்ளது.

பெங்களூரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி, தனது பெயரை மீரா மீதுன் என மாற்றிக் கொண்டு அழகிப் போட்டிகளில் பங்கேற்றார். மிஸ் குயின் ஆஃப் சவுத் இந்தியா, மிஸ் தமிழ்நாடு, மிஸ் சவுத் இந்தியா ஆகிய போட்டிகளில் அழகிப்பட்டம் வென்றார். பின்னர் படங்களில் நடிக்கவும் தொடங்கினார்.

இந்நிலையில், அவருக்கு ஓர் எண்ணம் தோன்றியது. தாமே அழகிப் போட்டி நடத்தினால் என்ன என்ற அந்த எண்ணம்தான் அவரை சிக்கலில் தள்ளியுள்ளது.

தமிழ்ப் பெண்களுக்கு அழகிப் போட்டிகளில் பங்கேற்க வாய்ப்புகள் பெரிதாகக் கிடைப்பதில்லை என்று கூறி, தமிழ்ப் பெண்களுக்காக அழகிப் போட்டி நடத்துவதாக முடிவு செய்தார் மீரா மிதுன். அந்த அழகிப் போட்டி, ஜூன் 3-ஆம் தேதி ஏற்பாடு செய்யப் பட்டிருப்பதாக இரு தினங்களுக்கு முன்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தாம் அந்த நிகழ்ச்சியை நடத்தக் கூடாது என்று அஜித் ரவி, ஜோ மைகேல் என இருவர் மிரட்டுவதாக காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். மேலும், தனது சமூக வலைதளங்களை முடக்கி தவறான பதிவுகள் போடுவதாகவும், அவர்களிடம் இருந்து மட்டுமல்லாமல், புதிய எண்களில் இருந்தெல்லாம் தமக்கு மிரட்டல் வருவதாகவும் சென்னை காவல் ஆணையரிடன் புகார் அளித்தார்.

meera mithun - 2025இந்நிலையில், மீராமிதுன் அழகிப் போட்டி நடத்த அனுமதியே பெறவில்லை என்றும், அவர் அழகிப்போட்டி நடத்துவதாகக் கூறி பல பெண்களிடம் பணம் வாங்கி மோசடி செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனால், மிஸ் சௌத் இந்தியா பட்டத்தை மீரா மிதுன் தவறாகப் பயன்படுத்தி மோசடி செய்வதால் 2016 -ஆம் ஆண்டு தாங்கள் வழங்கிய மிஸ் சௌத் இந்தியா பட்டத்தை ரத்து செய்வதாக அந்த அமைப்பு டிவிட்டர் பதிவில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.. மேலும், மீரா மிதுன் இந்தப் பட்டத்தை வேறு எங்கும் பயன்படுத்தக்கூடாது என்றும் எச்சரித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories