போலீசார் ஸ்டிரைக்கிள் குதிக்க உள்ளதால் கலக்கத்தில் அரசு

பணிச்சுமை, மேலதிகாரிகள் நெருக்கடி, குறைவான ஊதியம் போன்ற பிரச்சினைகளுக்கு எதிராக, ஜூன் 4ம் தேதி கர்நாடகாவை சேர்ந்த சுமார் 50 ஆயிரம் போலீஸ் கான்ஸ்டபிள்கள் ‘வேலை நிறுத்த’ போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
சட்டம்-ஒழுங்கை கட்டிக்காப்பாற்ற வேண்டிய பொறுப்பு காவல்துறை கையில்தான் உள்ளது என்பதால், ஒழுங்கை மீறி அவர்கள் நடக்க அனுமதி கிடையாது. அவ்வாறு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் உடனடியாக பணியில் இருந்து நீக்க முடியும்.
எனவே, கர்நாடக கான்ஸ்டபிள்கள் நடத்தப்போகும் போராட்டம் நாடு முழுக்க பெரும் எதிர்பார்ப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

15 மணிநேர வேலை
தினமும் 15 மணி நேர வேலை, விடுமுறை மறுப்பு, கூடுதல் நேர பணிக்கு பணம் தராதது, குறைவான ஊதியம், அதிகாரிகள் நெருக்கடி போன்றவை இந்த போராட்டத்திற்கு காரணமாம்.

சம்பளம் வேறுபாடு
பக்கத்து மாநிலமான ஆந்திராவில், சப்-இன்ஸ்பெக்டருக்கு அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் வரை மாத ஊதியம் கிடைக்கும் நிலையில், அதே ரேங்கிலுள்ள கர்நாடக போலீஸ்காரருக்கு கிடைப்பது ரூ.35 ஆயிரம்தான். இதுபோன்ற ஊதிய ஏற்றத்தாழ்வுகளை களைய மாநில அரசை பலமுறை கேட்டுக்கொண்டும், பலனில்லை.

குமுறல்
85 ஆயிரம் போலீசாரை கொண்ட கர்நாடக காவல்துறையில், சுமார் 60 ஆயிரம் பேர் கான்ஸ்டபிள்கள்தான். இவர்கள் கோரிக்கைகள் அரசுக்கு சென்று சேராத அளவுக்கு உயர் அதிகாரிகளின் அடக்குமுறை இருப்பதாக குமுறுகிறார்கள் கான்ஸ்டபிள்கள்.

அரை லட்சம் போலீசார்
இந்நிலையில்தான் சுமார் 50 ஆயிரம் கான்ஸ்டபிள்கள் ஜூன் 4ம் தேதி மொத்தமாக விடுமுறை எடுக்க உள்ளனராம். இந்த போராட்டத்தை ‘அகில கர்நாடக போலீஸ் மகா சங்கா’ என்ற அமைப்பு ஒருங்கிணைத்து வருகிறது.

கலக்கத்தில் கர்நாடக அரசு
நாட்டில் எங்குமே இதுபோன்ற போராட்டங்கள் நடைபெறாத நிலையில், கர்நாடக அரசு நெருக்கடியில் சிக்கியுள்ளது. அனைத்து வகை நடவடிக்கைகளையும் எடுத்து போராட்டத்தை ஒடுக்க அரசு தீவிர கதியில் இறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

[wp_ad_camp_4]

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories