December 6, 2025, 7:46 PM
26.8 C
Chennai

காங். Vs பாஜக.; குஷ்பு Vs காயத்ரி; இஸ்லாம் Vs இந்து..! டிவிட்டர் லடாய்!

kushboo gayathri raghuram - 2025 மற்ற மதத்தை மதி! உன் மதத்தை அவர்கள் இழிவு படுத்த அனுமதிக்காதே! – இந்தக் கொள்கையில் உறுதியாக இருக்கிறார் நடிகையும் பாஜக., பிரமுகருமான காயத்ரி ரகுராம்!

நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியில் உள்ளார். நடிகை காயத்ரி ரகுராம் பாஜக.,வில் உள்ளார். இருவருமே டிவிட்டரில் பிரபலமாக உள்ளனர். இருவருக்கும் ஃபாலோயர்ஸும் அதிகம். விவாதிப்பவர்களும் அதிகம் பேர் உள்ளனர்.

அன்றாட நிகழ்வுகள் குறித்து இருவரும் அடிக்கடி டிவிட்டரில் மோதிக்கொள்வதும் இப்போது சகஜமாகி விட்டது. முன்னர் காங்கிரஸுக்கு ஐடி விங் தலைவியாக இருந்தார் திவ்யா ஸ்பந்தனா என்ற குத்து ரம்யா. அப்போதும் காரசார விவாதங்கள் களை கட்டின.

தற்போது இருவருக்கும் ஒரு கருத்து மோதல் ஏற்பட்டது. அது கட்சியையும் தாண்டி, மத ரீதியாகச் சென்று கொண்டிருந்தது. குஷ்பு இசுலாமியராக பிறந்திருதாலும், சுந்தர்.சி.,யை திருமணம் செய்து கொண்ட பின்னர் கலாசார ரீதியாக மாறியுள்ளார்.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜார்கண்ட் மாநிலத்தில் இளைஞர் ஒருவரை சிலர் பிடித்து வைத்து ஜெய்ஸ்ரீ ராம் என்று கோஷம் இடும் படி அடித்த காட்சி இணையதளத்தில் வைரலாக்கப் பட்டது. இந்த வீடியோ குறித்து இருவரும் ஒருவருக்கொருவர் கருத்துப் பரிமாற்றம் என்ற பெயரில் மோதலில் ஈடுபட்டனர்.

kushboo gayathri raghuram2 - 2025இந்த வீடியோ குறித்து தனது டுவிட்டரில் பதிவிட்ட குஷ்பு, “ஜெய்ஸ்ரீராம் என்று சொல்லச் சொல்லி ஒரு இளைஞரைக் கொன்றுவிட்டனர்! இதுதான் இந்தியாவா?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதில் அளித்த காயத்ரி ரகுராம், “இந்துக்களைக் கொலைகாரர்களாக சித்திரிப்பது இப்போது டிரண்டாகி விட்டது. மற்ற மதத்தினர் தவறு செய்யும்போது குஷ்பு வாய் திறப்பதே இல்லையே ஏன்?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

ஆனால் இதற்கு பதில் அளிப்பது போல் பெயர் குறிப்பிடாமல் குஷ்பு பதில் அளித்தார். அது என்ன விவரம் என்று தெரியாமல் டிவிட்டர் வாசிகள் கொஞ்சம் குழம்பித்தான் போயினர்.

twitter war - 2025பின்னர் இன்னொரு பதிவில் குஷ்பு, “உங்களைப் போன்றவர்களுடன் விவாதம் செய்ய நான் தயாராக இல்லை. உங்கள் உறவினர்கள் மீது மரியாதை வைத்து இருக்கிறேன். எனவே வாயை மூடிக்கொண்டிருக்கவும்” என்று கூறியிருந்தார்.

அதற்கு பதிலளித்த காயத்ரி ரகுராம், “நீங்கள் என் மதத்தை இழிவு செய்தால் நான் சும்மா இருக்க மாட்டேன். மரியாதையாக பேசக் கற்றுக் கொள்ளுங்கள். தனிப்பட்ட முறையில் உங்கள் மீது எனக்கு ஒன்றும் பகை இல்லை” என்று கூறினார்.

love everybody 1 - 2025

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories