அத்திவரதர் வைபவம் ஆக.17 ஆம் தேதியுடன் நிறைவு: ஆட்சியர் உறுதி!

athivarathr1 horz - 2026

அத்திவரதர் மீண்டும் வரும் 17ஆம் தேதி அனந்தசரஸ் குளத்திற்குள் கொண்டு செல்லப்படுவதில் மாற்றமில்லை; ஆகமவிதிப்படி ஆகஸ்ட் 17ஆம் தேதி மாலை அல்லது இரவு குளத்திற்குள் அத்திவரதர் கொண்டு செல்லப்படுவார் என்றார் மாவட்ட ஆட்சியர்.

விஷ்ணு காஞ்சிபுரம் ஸ்ரீவரதராஜ பெருமாள் ஆலயத்தில் நடைபெற்று வரும் அத்திவரதர் வைபவம் திட்டமிட்ட படி ஆகஸ்ட் 17ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. அத்திவரதர் பெருமான் அன்று அனந்தசரஸ் குளத்திற்குள் மீண்டும் எழுந்தருளச் செய்யப் படுகிறார். இதனை ஆட்சியர் பொன்னையா உறுதி செய்தார். அத்திவரதர் தரிசனம் நீட்டிக்கப்படும் என சமூக வலைதளங்களில் உலவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

காஞ்சிபுரத்தில் இன்று 43வது நாளாக அத்திவரதர் வைபவம் நடைபெற்று வருகிறது. இன்னும் மூன்று தினங்களே அத்திவரதர் வைபவம் நடைபெறவுள்ளதால், அதற்குள் அத்திவரதரை தரிசித்துவிட ஏராளமான பக்தர்கள் காஞ்சியில் கூடியுள்ளனர்.

இதனிடையே அத்திவரதர் வைபவம் குறித்து விளக்குவதற்காக செய்தியாளர்களை சந்தித்தார் மாவட்ட ஆட்சியர் பொன்னையா. அப்போது அவர், “பெருகி வரும் பக்தர்கள் கூட்டத்தை கணக்கில் கொண்டு, நகரைச் சுற்றி 3 இடங்களில் அனைத்து விதமான வசதிகளுடன் தங்குமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.. தற்காலிக பேருந்து நிறுத்தங்களுக்கு அருகே இந்த தங்குமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட அளவு பக்தர்கள் தரிசனம் முடித்ததும் இங்கு தங்கியுள்ளவர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப் படுவார்கள். வந்தவாசி திருவண்ணாமலையில் இருந்து வரும் பக்தர்கள் டி.ஏ.வி பள்ளி அருகே தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ALSO READ:  பிரதமர் மோடியை முடிக்க சதியா? பீகாரில் கைதானவரிடம் விசாரணை தீவிரம்!

அத்திவரதரை தரிசனம் செய்வதற்கான நாட்கள் நீட்டிக்கப்படவுள்ளன என்று சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்திகள் வதந்தி. திட்டமிட்டபடி ஆகஸ்ட் 17ஆம் தேதி அத்திவரதர் மீண்டும் அனந்தசரஸ் குளத்துக்குள் வைக்கப்படுவார்! சமூக வலைதளங்களில் பரவும் செய்திகளை நம்ப வேண்டாம்” என்றார்.

kanchipuram inspector collector - 2026இதனிடையே காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையாவை கண்டித்து ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம் அத்திவரதர் பாதுகாப்பு பனியின் போது காவல் ஆய்வாளர் ரமேஷை ஆட்சியர் ஒருமையில் பேசியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. காவல் ஆய்வாளர் ரமேஷை தரக்குறைவாகவும், அநாகரிகமாகவும் ஆட்சியர் நடத்தியதாக ஓய்வு பெற்ற காவல்துறை நலச்சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

மேலும், சரிவர ஏற்பாடுகள் செய்து தராமல் காவல் துறை அதிகாரியை மட்டும் குற்றம் சாட்டும் ஆட்சியர், தன் பொறுப்பில் இருந்து கடமை தவறிவிட்டார் என்றும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப் பட்டுள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories