December 5, 2025, 12:36 PM
26.9 C
Chennai

அண்ணாத்த படக் குழுவில் 4 பேருக்கு கொரோனா! ரஜினிக்கு என்ன ஆச்சு?!

annathe rajini

அண்ணாத்த படப்பிடிப்புக் குழுவில் 4 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ரஜினி மற்றும் மற்றவர்கள் நலமாக இருப்பதாகவும், இதனால் அண்ணாத்த படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் படத் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.

சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் அண்ணாத்த படம், ரஜினியின் 168-வது படமாக வளர்ந்து வருகிறது. வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக அஜித் நடித்த விஸ்வாசம் படத்தை இயக்கிய சிவா, தற்போது ரஜினி நடிக்கும் அண்ணாத்த படத்தை இயக்கி வருகிறார்.

அண்ணாத்த படத்தில் நயன்தாரா, பிரகாஷ் ராஜ், குஷ்பு, மீனா, கீா்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்பட பலா் நடித்து வருகின்றனா். ஒளிப்பதிவு – வெற்றி, இசை – இமான்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், கொரோனா பரவல் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. பின்னர், அரசு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கிய நிலையில், மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியது

இதற்காக நடிகா் ரஜினிகாந்த், தனி விமானத்தில் சென்னையில் இருந்து ஹைதராபாத் சென்றாா். அப்போது, ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷுடன் ரஜினி அமர்ந்திருக்கும் புகைப்படத்தை சன் பிக்சர்ஸ் வெளியிட்டது. அண்ணாத்த படத்தில் ரஜினியின் கெட்டப் எப்படி இருக்கும் என்பதை அதன் மூலம் ரசிகர்கள் அறிந்து கொண்டு, அந்தப் புகைப்படத்தை அதிகம் பகிர்ந்து கொண்டனர். அதன் பின்னர் ரஜினி தொடர்ச்சியாக 14 மணி நேரம் படப்பிடிப்பில் பங்கேற்றதாக செய்திகள் வெளியாயின.

இந்நிலையில் அண்ணாத்த படப்பிடிப்புக் குழுவில் நான்கு பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து ஹைதராபாத்தில் ராமோஜி ராவ் திரைப்பட நகரில் நடைபெற்று வந்த அண்ணாத்த படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா அறிகுறிகள் எதுவும் இல்லை என்றாலும் சூழ்நிலை கருதி ரஜினி சென்னைக்குத் திரும்புவார் என்று கூறப் படுகிறது. ஏற்கெனவே கட்சி வேலைகளில் கவனம் செலுத்த ரஜினி திட்டமிட்டிருந்தார். அதற்காக, சன் பிக்சர்ஸிடம் அவர் கால்ஷீட் குறித்த விவகாரங்களில் அனுமதி கேட்டிருந்தார் என்று கூறப் படுகிறது.

இதனிடையே, இது குறித்து சன்பிக்சர்ஸ் நிறுவனம் ஒரு டிவிட்டர் பதிவில் இதனை உறுதிப் படுத்தியிருக்கிறது.

Source: Vellithirai News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories