திருப்பாவை – 28; கறவைகள் பின்சென்று (பாடலும் விளக்கமும்)

thiruppavai pasuram 28
thiruppavai pasuram 28

ஆண்டாள் நாச்சியார் அருளிச் செய்த திருப்பாவை… பாடலும் விளக்கமும்

விளக்கம்: வேதா டி.ஸ்ரீதரன்

கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்
அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து உன்தன்னைப்
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாமுடையோம்
குறைவொன்றும் இல்லாத கோவிந்தா! உன்தன்னோடு
உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச்
சிறுபேர் அழைத்தனவும் சீறியருளாதே
இறைவா! நீ தாராய் பறையேலோர் எம்பாவாய். (28)

பொருள்

நாங்கள் ஆயர் குலத்தவர்கள். மாடுகளை மேயவிட்டபடி ஆங்காங்கே உட்கார்ந்து கூட்டாஞ்சோறு சாப்பிடுவோம். எங்களுக்குப் படிப்பறிவெல்லாம் கிடையாது. ஆனாலும், முழுமைப்பொருளான கோவிந்தா, நீயே எங்கள் மத்தியில் மாடு மேய்ப்பவனாகப் பிறக்கும் அளவு நாங்கள் புண்ணியம் செய்திருக்கிறோம். நாங்கள் அறிவு இல்லாதவர்கள், அப்பாவிச் சிறுவர்கள். உன்னை முறைப்படி எவ்வாறு வழிபடுவது என்பதெல்லாம் எங்களுக்குத் தெரியாது. எங்கள் பரிசுத்தமான அன்பினால் நாங்கள் உன்னை எந்தப் பெயரிட்டு எந்த விதத்தில் அழைத்தாலும், அதில் உள்ள அன்பை மட்டும் ஏற்றுக்கொள், குற்றங்குறைகளைப் பொருட்படுத்தாதே. உனக்கும் எங்களுக்கும் உள்ள இந்த உறவு எங்களது எல்லாப் பிறவிகளிலும் தொடர வேண்டும். இந்த வரத்தை எங்களுக்கு அருள்வாயாக.

ALSO READ:  வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்... தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!
thiruppavai pasuram28
thiruppavai pasuram28

அருஞ்சொற்பொருள்

கறவை – மாடு

கானம் – கானகம்

கானம் சேர்ந்து – காட்டை அடைந்து

அறிவொன்றும் இல்லாத – சாஸ்திர அறிவு இல்லாத

குறை ஒன்றும் இல்லாத – குறைகள், பாவங்கள், அசுத்தம் எதுவும் இல்லாத தூயவன்

உறவேல் – உறவு (அடிபணிந்து சேவை செய்யும் நிலை)

ஒழிக்க ஒழியாது – எந்தப் பிறவியிலும் மாறாமல் தொடர்வது, சாசுவதமானது

சிறுபேர் – மரியாதையின்றி அழைப்பது

குறையொன்றும் இல்லாத கோவிந்தன் –

இயல்புக்கு விரோதமானது குறை. மாயையால் மூடப்பட்ட ஜீவாத்மா தனது இயல்பை அறியாதவனாõக இருக்கிறான். பரமாத்மனுக்கு அத்தகைய தோஷங்கள் இல்லை. அவன் மெய்ப்பொருள். அவனுக்குப் புறம்பே எதுவும் இல்லை. எனவே, அவன் விமலன் – குறையொன்றும் இல்லாதவன்.

மொழி அழகு

உன்தன்னைப் பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாமுடையோம் –

எங்கள் குலத்தில் உன் அவதாரம் நிகழுமளவு புண்ணியம் கொண்டவர்கள் நாங்கள்;

எங்கள் குலத்தில் உன் அவதாரம் நிகழ்ந்ததால் நாங்கள் புண்ணியம் அடைந்தோம்;

ALSO READ:  அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

புண்ணியனான உன்னையே எங்களில் ஒருவனாகப் பெற்றிருக்கும் புண்ணியவான்கள் நாங்கள்.

***

சீறியருளாதே –

திருப்பாவையில் காணப்படும் முரண்தொடைகளின் சிகரமாகத் திகழ்வது இதுதான். அதென்ன சீறி அருளுதல்?

(வைணவப் பெரியோர் சம்பாஷணைகளில் ‘கோபித்தருளாமல்’ என்று சொல்லும் வழக்கம் உண்டு என்பதும் இங்கு நினைவுகூரத்தக்கது.)

ஆன்மிகம், தத்துவம்

உன்தன்னைப் பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாமுடையோம் –

புண்ணியனான உன்னையே எங்களில் ஒருவனாக வாய்க்கப் பெற்றவர்கள் நாங்கள்.

கிருஷ்ணம் தர்மம் ஸநாதநம் என்பது மகாபாரத வாக்கு. முக்காலத்துக்கும் பொதுவான தர்மத்தின் மனித வடிவுதான் கிருஷ்ணன் என்பது இதன் பொருள். அவனை மட்டுமே பற்றி நின்றவர்கள் கோபிகைகள்.

***

அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து –

இங்கு ஆண்டாள் சொல்லும் தகுதியின்மைதான் பக்திக்கான மேலான தகுதியாகும். நான் என்கிற எண்ணம் இருந்தால்தானே எனது அறிவு, எனது தகுதி முதலானவை தோன்றவே முடியும்? அந்த எண்ணம் அறவே இல்லாது ஒழிந்த நிலையே கோபிகைகளின் பக்தி என்பது பாகவதம் கூறும் செய்தி.

ALSO READ:  அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

”மிக்க வலுவான இல்லறச் சங்கிலிகளை அறுத்துவிட்டு வந்து என்னைச் சேவித்தவர்களும், களங்கமற்ற பக்தி உடையவர்களுமாகிய உங்களுக்கு தேவர்களின் ஆயுட்காலத்திலும் நான் பிரதி உபகாரம் செய்யச் சக்தியற்றவன்.”

–     கோபிகைகளிடம் ஸ்ரீகிருஷ்ணன் சொன்னது
      (
ஸ்ரீமத் பாகவதம்)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories