December 5, 2025, 9:34 AM
26.3 C
Chennai

கரூர் மாவட்ட பாரதீய வரலாற்றுத் தொகுப்புப் பேரவை புதிய நிர்வாகிகள் பொறுப்பு ஏற்பு

 தில்லி 'பாரதீய வரலாற்றுத் தொகுப்புப் பேரவை' கரூர் மாவட்ட புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் தலைமை உரை ஆற்றுகிறார் கரூர் மாவட்ட கௌரவ தலைவர் வள்ளுவர் செங்குட்டுவன். அருகில் பேரவையின் மாநில பொதுச் செயலாளர் முனைவர் ராமசுப்பிரமணியன், மாநில அமைப்புச் செயலாளர் கதிரவன், திருப்பூர் கோட்ட செயலாளர் பேராசிரியர் மாரிமுத்து, கரூர் மாவட்ட பொதுச் செயலாளர் மருத்துவர் இன்ப பிரபஞ்சன், துணைத் தலைவர் முனைவர். ஸ்ரீ பாலசுப்பிரமணியன், இணைச் செயலாளர்கள் மைதிலி, குளித்தலை சுந்தர் மற்றும் கரூர் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்கள்.

புது தில்லி ‘பாரதீய வரலாற்றுத் தொகுப்புப் பேரவை’ இந்திய அரசின் வரலாற்று ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து வரலாற்று ஆராய்ச்சி தொடர்பாக அறிவியல்பூர்வமான பல்வேறு முக்கிய பணிகளை நாடு முழுவதும் செய்து வருகிறது. இதன் கரூர் மாவட்ட புதிய நிர்வாகிகள் பதவியேற்பு, பயிற்சி பட்டறை கரூர் வள்ளுவர் ஹோட்டல் வாசுகி மகாலில் இன்று நடைபெற்றது.

பாரதீய வரலாற்றுத் தொகுப்புப் பேரவை கரூர் மாவட்ட கௌரவ தலைவராக வள்ளுவர் குழும தாளாளர் செங்குட்டுவன், பொதுச் செயலாளராக எழுத்தாளர் மருத்துவர் இன்ப பிரபஞ்சன், துணைத் தலைவராக முனைவர். ஸ்ரீ பாலசுப்பிரமணியன், இணைச் செயலாளர்களாக கல்வெட்டியல் ஆய்வாளர் மைதிலி, குளித்தலை சுந்தர், மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்களாக கல்லூரிப் பேராசிரியர்கள் சுப்பிரமணியன், ரமேஷ், முனைவர் வெங்கடேஷ், கரூர் கல்வெட்டியல் ஆய்வாளர் மணி, வரலாற்று ஆர்வலர்கள் சரவணன், தீபா, ரமேஷ் பொறுப்பேற்றனர்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழ்நாடு புதுச்சேரி மாநில அமைப்புச் செயலாளர் கதிரவன் மறக்கப்பட்ட வரலாறும் மறைக்கப்பட்ட வரலாறும் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். மாநில பொதுச் செயலாளர் முனைவர் ராமசுப்பிரமணியன் நிர்வாகிகள் பயிற்சி பட்டறையை ஒருங்கிணைத்தார். கௌரவ தலைவர் வள்ளுவர் செங்குட்டுவன் அடுத்த ஆண்டிற்கான மாவட்ட செயல் திட்டத்தை சிறப்பாக நிறைவேற்றுவது குறித்து தலைமை உரை ஆற்றினார்.

இந்நிகழ்வில் திருப்பூர் கோட்ட செயலாளர் பேராசிரியர் மாரிமுத்து, திருப்பூர் மாவட்டச் செயலாளர் தினேஷ், கரூர் வரலாற்று பாதுகாப்பு சங்கம் பரமசிவம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories