குற்றாலத்தில் சோப்பு, ஷாம்பு, எண்ணெய்க் குளியலுக்குத் தடை: தூய்மையாகக் காட்சி தரும் அருவிக் கரை!

குற்றாலத்தில் இப்போது குளிக்க வருபவர்கள், சோப்பு, ஷாம்பு, எண்ணெய், சிகைக்காய் ஆகியவற்றை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
முன்பெல்லாம் எண்ணெய்க் குளியல்தான் குற்றாலத்தில் சிறப்பாக இருக்கும். தலையில் எண்ணெய் வைத்துக் கொண்டு அருவியில் நின்றால், சிகைக்கால், ஷாம்பு போடாமலே தலையில் வைத்த எண்ணெய் காணாமல் போய் விடும்.
எண்ணெய் மாலிஷ் செய்து விடுவதற்கென்றே சிலர் அருவிக் கரைக்கு வெளியே அமர்ந்திருப்பார்கள். இப்போது அந்தக் காட்சிகளை எல்லாம் காண முடியாது. ஆனால்… அருவிக் கரை மிகத்தூய்மையாக உள்ளது. தண்ணீர் அதே தெளிவுடன் செல்கிறது. அருவி விழுந்து நீர் ஓடும் ஓடையில், பிளாஸ்டிக் கழிவு அடைப்புகள் இல்லாமல் நீர் சலசலத்து ஓடுகிறது.
ஆனாலும், வியாபாரிகள் அலுத்துக் கொள்கிறார்கள். கூட்டம் இல்லை… நீதிமன்ற உத்தரவு இப்படியா இருக்க வேண்டும்? குற்றாலக் குளியல் என்றாலே எண்ணெய்தானே! மூலிகை எண்ணெய் தேய்த்து குளிக்கத்தானே குற்றாலம் வருகிறார்கள்… – இவ்வாறாக!~
திங்கள் அன்று குளிக்கச் சென்றேன். கூட்டம் ஓரளவு இருந்தது. நெருக்கியடிக்கும் நிலை இல்லை என்றாலும், அருவிக்கு அருகில் ஒரே தள்ளுமுள்ளு. ஆனால், அருவி நீர் நன்றாக விழும் நடுப் பகுதியில் நெருக்குதல் இன்றி, நன்றாகக் குளிக்கும் வகையில் இருந்தது.
முன்பெல்லாம் அருவி நீர் விழுகிறதோ இல்லையோ… ஒவ்வொருவர் உடலிலும் தேய்த்திருக்கும் எண்ணெய்ப் பிசுக்கை நம் உடலில் இழுவி விட்டுச் செல்வார்கள்… இப்போது அப்படி இல்லை என்றாலும், நெருக்கியடித்தலின் போதான வாடை… குறிப்பாக டாஸ்மாக் சரக்கு நெடி.. குமட்டத்தான் செய்கிறது. இத்தனைக்கும் அருவியிருக்கும் இடத்தில் இருந்து ஒரு கி.மீ. தொலைவுக்கு டாஸ்மாக் கடைகளை மாற்றி விட்டார்களாம்.. இருந்தாலும் தண்ணி போடாமல் தண்ணியில் தலை காட்ட ஏன் இந்தக் குடிமகன்களுக்கு ஞானம் வர மறுக்கிறதோ தெரியவில்லை!
தமிழகம் தரம் தாழ்ந்து போவதற்கு, அளவுக்கு அதிகமான சரக்கு விற்பனை ஒரு காரணமாக அமையக் கூடும்!

ALSO READ:  தாமிரபரணிக் கரை ஆலயத்தில்... வழிபாட்டில் திருவள்ளுவர்!
senkottai2 - 2026

courtallam1 - 2026

courtallam2 - 2026

courtallam3 - 2026

courtallam4 - 2026

courtallam5 - 2026

courtallam6 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Topics

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories