December 5, 2025, 11:22 PM
26.6 C
Chennai

குற்றாலத்தில் சோப்பு, ஷாம்பு, எண்ணெய்க் குளியலுக்குத் தடை: தூய்மையாகக் காட்சி தரும் அருவிக் கரை!

குற்றாலத்தில் இப்போது குளிக்க வருபவர்கள், சோப்பு, ஷாம்பு, எண்ணெய், சிகைக்காய் ஆகியவற்றை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
முன்பெல்லாம் எண்ணெய்க் குளியல்தான் குற்றாலத்தில் சிறப்பாக இருக்கும். தலையில் எண்ணெய் வைத்துக் கொண்டு அருவியில் நின்றால், சிகைக்கால், ஷாம்பு போடாமலே தலையில் வைத்த எண்ணெய் காணாமல் போய் விடும்.
எண்ணெய் மாலிஷ் செய்து விடுவதற்கென்றே சிலர் அருவிக் கரைக்கு வெளியே அமர்ந்திருப்பார்கள். இப்போது அந்தக் காட்சிகளை எல்லாம் காண முடியாது. ஆனால்… அருவிக் கரை மிகத்தூய்மையாக உள்ளது. தண்ணீர் அதே தெளிவுடன் செல்கிறது. அருவி விழுந்து நீர் ஓடும் ஓடையில், பிளாஸ்டிக் கழிவு அடைப்புகள் இல்லாமல் நீர் சலசலத்து ஓடுகிறது.
ஆனாலும், வியாபாரிகள் அலுத்துக் கொள்கிறார்கள். கூட்டம் இல்லை… நீதிமன்ற உத்தரவு இப்படியா இருக்க வேண்டும்? குற்றாலக் குளியல் என்றாலே எண்ணெய்தானே! மூலிகை எண்ணெய் தேய்த்து குளிக்கத்தானே குற்றாலம் வருகிறார்கள்… – இவ்வாறாக!~
திங்கள் அன்று குளிக்கச் சென்றேன். கூட்டம் ஓரளவு இருந்தது. நெருக்கியடிக்கும் நிலை இல்லை என்றாலும், அருவிக்கு அருகில் ஒரே தள்ளுமுள்ளு. ஆனால், அருவி நீர் நன்றாக விழும் நடுப் பகுதியில் நெருக்குதல் இன்றி, நன்றாகக் குளிக்கும் வகையில் இருந்தது.
முன்பெல்லாம் அருவி நீர் விழுகிறதோ இல்லையோ… ஒவ்வொருவர் உடலிலும் தேய்த்திருக்கும் எண்ணெய்ப் பிசுக்கை நம் உடலில் இழுவி விட்டுச் செல்வார்கள்… இப்போது அப்படி இல்லை என்றாலும், நெருக்கியடித்தலின் போதான வாடை… குறிப்பாக டாஸ்மாக் சரக்கு நெடி.. குமட்டத்தான் செய்கிறது. இத்தனைக்கும் அருவியிருக்கும் இடத்தில் இருந்து ஒரு கி.மீ. தொலைவுக்கு டாஸ்மாக் கடைகளை மாற்றி விட்டார்களாம்.. இருந்தாலும் தண்ணி போடாமல் தண்ணியில் தலை காட்ட ஏன் இந்தக் குடிமகன்களுக்கு ஞானம் வர மறுக்கிறதோ தெரியவில்லை!
தமிழகம் தரம் தாழ்ந்து போவதற்கு, அளவுக்கு அதிகமான சரக்கு விற்பனை ஒரு காரணமாக அமையக் கூடும்!

senkottai2 - 2025

courtallam1 - 2025

courtallam2 - 2025

courtallam3 - 2025

courtallam4 - 2025

courtallam5 - 2025

courtallam6 - 2025

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories