உடலில் ஒரு பாதியை உமைக்குத் தந்த பரமன்! இதயத்தில் இலக்குமியை இருத்தி வைத்த மாலவன்! எல்லாம் அன்பின் அடையாளங்கள்! ஆணும் பெண்ணுமாய் இயைந்த வாழ்வைக் காட்டுகிறார்.. பரமன்! எந்நேரமும் மனத்தில் மனைவியை நினைத்தபடி உள்ளார் மாலவன்! வணங்கும் தெய்வத்தின் வழியில் நானும் …. என் வாழ்வின் ஒரு பாதி நீ! மறு பாதி நான்! என் இதயமே நீயாய்! என் நினைவெல்லாம் உனைப் பற்றி! நீயே நானாக இருக்கும்போது… அட… நானே கடவுள்!
Published:

