நன்றாகத்தான் நடிக்கிறாய் நீ! நாடகத்தின் ஒத்திகையை திரைக்கு முன்னரேயே பார்த்துக் கொண்டு..! கருத்தைக் கவர்ந்த என் கவிதைப் பெண்ணே… உன் பேஸ்லுக்கில் சிதறித் தெறித்த என் உள்ளத்தை… நான் பேஸ்புக்கில் தேடித் தேடி இளைத்தேன்! வார்த்தைப் பரிமாற்றம் அதிலாவது வசமாகட்டும் என்று! உன் நினைவுகள் தந்த உஷ்ணம்! மூளை சூடு கண்டது! உடல் மெலிவு கண்டது! உடை தளர்வு கண்டது! ஆனாலும்.. நீயென் உள்ளத்தில் ‘கூலா’க உலா வருகிறாய்! ‘புஷ்டி’யுடன் என்னில் வாழ்கிறாய்! தினம் எனை மயக்குவது உன் அழகிய வதனம்! அந்த ஒரு கண மகிழ்ச்சிக்காய் உனைப் பார்க்கும் போதெல்லாம்.. புன்னகைப்பில் காட்டுகிறாயே ஏன் இந்த கஞ்சத்தனம்? காதலைத்தான் தர மறுத்தாய்! காமத்தை உன்னிடம் எதிர்பார்க்கவும் இல்லை! நான் கேட்டதெல்லாம்… ஊடுருவிப் பார்க்கும் உன் விழி நோக்கல்கள்… உதட்டை ஈரமாக்கி நீ உதிர்க்கும் உளறல்கள்… முத்தான தெத்துப் பல் தெரிய முறுவலிக்கும் புன்னகைகள்… அலைபாயும் மனதை அடக்குவதாய் அதிரவரும் அதரச் சிரிப்புகள்… இதற்கும்கூட இசையாத உள்ளமோ உனதுள்ளம்? ஆனாலும்… என் முன்னே நன்றாகத்தான் நடிக்கிறாய் நீ! துடிக்கும் என் இதயமும் உன் முன்னே நடிக்கிறது… நீயே இருந்தும்.. நீ இல்லாததுபோல்!
நாடகத்தின் ஒத்திகையோ?
Popular Categories


