சசிகலா முதல்வராக வேண்டும் என ஏன் சொன்னேன்?: தம்பிதுரை விளக்கம்

சென்னை:

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா உடனடியாக தமிழக முதல்வராக வேண்டும் என்று கோரிக்கை விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ள தம்பிதுரை. தான் ஏன் அவ்வாறு சொன்னேன் என்பதற்கான விளக்கங்களை செய்தியாளர்களிடம் அளித்தார்.

முன்னதாக இன்று (திங்கள்கிழமை) காலை சென்னை போயஸ் கார்டனுக்கு தனது மனைவியுடன் தம்பிதுரை வந்தார். சுமார் 1 மணி நேரம் போயஸ் கார்டன் வீட்டில் சசிகலாவுடன் அவர் ஆலோசனையில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

“அதிமுக பொதுச்செயலாளராக இருக்கும் சசிகலா உடனடியாக தமிழக முதல்வராக பொறுப்பேற்க வேண்டும் என நேரில் வலியுறுத்தினேன். எனது கோரிக்கையை பரிசீலிப்பதாக அவர் கூறினார்” என்றார்.

அப்போது செய்தியாளர் ஒருவர், “ஓபிஎஸ் தமிழக முதல்வராக தொடர்வதில் உங்களுக்கு விருப்பமில்லையா?” என வினவினார்.

அதற்கு பதிலளித்த தம்பிதுரை, “உத்தரப் பிரதேசத்தில், ஆளும் சமாஜ்வாதி கட்சியின் பொறுப்பு ஒருவரிடமும், ஆட்சிப் பொறுப்பு ஒருவரிடமும் இருக்கிறது. இதனால், அக்கட்சிக்குள் பல்வேறு சிக்கல்கள் உருவெடுத்துள்ளன. அதேபோல் தமிழகத்திலும் ஒரு சூழல் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற காரணத்தாலேயே கட்சிப் பொறுப்பு, ஆட்சிப் பொறுப்பு இரண்டையும் ஒருவரே வைத்துக்கொள்ள வேண்டும் என சசிகலாவிடம் நேரில் வலியுறுத்தியுள்ளேன். என்னுடைய விருப்பதைத் தெரிவித்திருக்கிறேன், மற்றவர்களின் எண்ணம் என்னவென்பது எனக்குத் தெரியாது. இதுதவிர இப்போதைக்கு வேறு எந்த கேள்விக்கும் நான் பதில் அளிக்கத் தயாராக இல்லை” என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories