குழந்தை விழுங்கிய ‘ஹேர்பின்’ அகற்றம்: அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்கு பாராட்டு

 

பத்து மாத குழந்தை விழுங்கிய ஹேர்பின்னை திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் வியாழக்கிழமை அகற்றி, குழந்தையின் உயிரை காப்பாற்றினர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே மருங்காபுரி கோனார்பட்டியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் தனியார் நிறுவனத்தில் எலக்ட்ரீஷியனாகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சுப்புலட்சுமி. இவர்களுக்கு 3 பெண் குழந்தைகளும், ஹரிஷ் (10 மாதம்) என்ற ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது.
வியாழக்கிழமை காலை வீட்டில் மற்ற குழந்தைகள் பள்ளிக்கு கிளம்பிக் கொண்டிருந்த நேரத்தில், விளையாடிக் கொண்டிருந்த ஹரிஷ், தலைக்கு வைக்கும் ஹேர்பின்னை எடுத்து விழுங்கிவிட்டான். இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கும் அழைத்துச் சென்றனர்.
திருச்சி அரசு மருத்துவமனையில் டாக்டர்கள், ஸ்கேன், எக்ஸ்ரே எடுத்து பரிசோதித்து பார்த்தபோது, குழந்தையின் மூச்சுக்குழாயில் ஹேர்பின் சிக்கியிருந்ததும், அதை அகற்றாவிட்டால் குழந்தை இறந்துவிடும் அபாயம் இருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து காது, மூக்கு, தொண்டை மருத்துவப் பிரிவின் தலைவர் டாக்டர் பழனியப்பன் தலைமையில், அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பவதாரிணி, மயக்கவியல் நிபுணர் சிவக்குமார் உள்ளிட்ட டாக்டர்கள் குழு, உடனடியாக அதிநவீன (விடியோ லெரிகோகோபிக்) எண்டோஸ்கோபிக் கருவி உதவியுடன் குழந்தையின் மூச்சுக்குழாயில் சிக்கியிருந்த 4 செ.மீ. நீளமும், 2.5 செ.மீ. அகலமும் கொண்ட ஹேர்பின்னை லாவகமாக எடுத்தனர். இதனால் குழந்தை இறப்பிலிருந்து தப்பி, தற்போது நலமுடன் உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய மருத்துவர்களுக்கு, மருத்துவமனையின் முதல்வர் எஸ். மேரி லில்லி பாராட்டு தெரிவித்தார். குழந்தையின் பெற்றோர்கள் நன்றி தெரிவித்தனர்.

ALSO READ:  விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள குழந்தை ஹரிஷ்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories