February 21, 2026, 12:18 PM
29.5 C
Chennai

கருணாநிதி வீட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளார்: வைகோ பரபரப்புப் பேச்சு

சென்னை:

திமுக தலைவர் கருணாநிதி வீட்டில் சிறை வைக்கப்பட்டு இருக்கிறார் என்ற மதிமுக பொதுச்செயலர் வைகோ பேச்சால் திமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

கருணாநிதிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு ஓய்வில் இருக்கும் போதெல்லாம் அவர் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளார் என யாராவது கூறுவர். இதைக் கேட்டு, கருணாநிதி வழக்கம் போல எதையாவது செய்து கொண்டு இவை எல்லாம் வதந்தி என்று சொல்லி, அதற்கு முற்றுப் புள்ளி வைப்பார். இது வழக்கமான ஒன்றாகிவிட்டது.

இதே போல், கருணாநிதி அண்மையில் உடல்நலக் குறைவால் அவதிப்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். அதன்பின்னர் கருணாநிதியிடம் இருந்து எந்த ஒரு அறிக்கையும் வெளியாகவில்லை. வழக்கமாக கேள்வி பதில் பாணியில் உடன்பிறப்புக் கடிதம் எழுதியும், அறிக்கை விட்டும் தனது இருப்பைக் காட்டிக் கொண்டிருப்பார். ஆனால் இதுவரை அவர் பெயரில் அறிக்கை எதுவும் வெளியாகாமல் இருப்பது அரசியல் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் திமுகவின் செயல் தலைவராக ஸ்டாலின் அறிவிக்கப்பட்டார். இந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட பொதுக்குழுவுக்கு கூட கருணாநிதி வரவில்லை. சில நாட்களுக்கு முன்னர் திருச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மதிமுக பொதுச்செயலர் வைகோ, கருணாநிதி வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாகக் கூறினார். அத்துடன் கிளாடியேட்டர் திரைப்படத்தில் அரச பதவிக்காக தந்தையை மகன் கொலை செய்ய முயற்சிப்பதையும் சுட்டிக்காட்டியிருந்தார் வைகோ.

செயல் தலைவரான நிலையில் ஸ்டாலினின் செயல்பாடுகளில் திமுகவில் அதிருப்தி இருப்பதாகக் கூறப்பட்டு வந்த நிலையில் வைகோவின் பேச்சு திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories