16 வயது மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! காதலன் கைது!

Published:

love - 2026

திருச்சி மாவட்டம் மணிகண்டம் வடக்கு நாகமங்கலம் பகுதியை சேர்ந்த 16 வயது மாணவி கடந்த 31-ந்தேதி காணாமல் போனார்.

தற்போது அவர் அங்குள்ள காட்டுப்பகுதியில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். இது குறித்த தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

kaithu - 2026

இதுகுறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்ட போது, இனாம்மாத்தூர் பகுதியை சேர்ந்த மதிக்குமார் என்ற அவரது காதலர் அவரை பாலியல் பலாத்காரம் செய்து, கல்லை எடுத்து தலையில் போட்டு கொலை செய்துவிட்டு பின் அங்கிருந்து தப்பி சென்றதும் தெரிய வந்தது. அதன்பின் காவல்துறையினர் மதிக்குமாரை கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img