திருச்சி மாவட்டம் மணிகண்டம் வடக்கு நாகமங்கலம் பகுதியை சேர்ந்த 16 வயது மாணவி கடந்த 31-ந்தேதி காணாமல் போனார்.
தற்போது அவர் அங்குள்ள காட்டுப்பகுதியில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். இது குறித்த தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்ட போது, இனாம்மாத்தூர் பகுதியை சேர்ந்த மதிக்குமார் என்ற அவரது காதலர் அவரை பாலியல் பலாத்காரம் செய்து, கல்லை எடுத்து தலையில் போட்டு கொலை செய்துவிட்டு பின் அங்கிருந்து தப்பி சென்றதும் தெரிய வந்தது. அதன்பின் காவல்துறையினர் மதிக்குமாரை கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.