எங்கிருந்தாலும் உனை நான் அறிவேன்! சென்னையில் அதி நவீன கேமரா கண்காணிப்பு!

cctv - 2026

காவல்துறை சார்பில் மூன்றாம் கண் திட்டம் சென்னை முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் இனி ஒரு திருடர்களும் தப்பிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இந்தியர்கள், வெளிநாட்டவர்கள் என பலரும் பணி புரிந்தும் தொழில் நடத்தியும் வருகிறார்கள்.

அவர்கள் அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் சென்னை காவல்துறை மூன்றாம் கண் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

சென்னையில் பாதுகாப்பை மேம்படுத்தும் விதமான பல்வேறு நடவடிக்கைகள் காவல்துறையால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் விதமாக மூன்றாம் கண் என்ற திட்டத்தின் மூலம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகின்றன,

cctv 1 - 2026

முன்னதாகவே பல்வேறு பகுதிகளில் கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தாலும் தற்போது தொடங்கப்பட்டுள்ள மூன்றாம் கண் என்ற திட்டத்தின் மூலம் சென்னையின் சிறிய தெருக்களும் கூட கேமராக்களின் கண்காணிப்பில் இருக்கும் நிலை உருவாகி வருவதாக கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி கொள்ளை நடக்கும் இடத்தில் உள்ள வாகனம் மற்றும் நபரின் அடையாளம் மட்டுமே தெளிவாக காணப்பட்டு வந்தது. சில இடங்களில் நம்பர் பிளேட் தெளிவாக தென்படாத சூழ்நிலை உருவாகி வந்தது. இந்த நிலையில் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளை தெளிவாக படமெடுக்கும் அதி நவீன கேமராக்கள் சென்னையில் பொருத்தப்பட தொடங்கியுள்ளன.

வாகனங்களின் நம்பர் பிளேட்களை கூட தெளிவாக காட்டும்
தற்போது பொருத்தப்பட்டு வரும் இந்த வகை கேமராக்கள் சாலைகளில் செல்லும் வாகனங்களின் நம்பர் பிளேட்களை கூட தெளிவாக எடுத்து கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பி வைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு சில வாகனங்களில் அரசு விதிகளை மீறி பல மாடல்களில் எண்கள் ஒட்டப்பட்டுள்ளது. இந்த கேமரா அதையும் தெளிவாக படமெடுக்கும்.

இதன் மூலம் வாகனம் சாலையைக் கடக்கும் நேரம், இடம் என அனைத்தும் உடனடியாக சேமிக்கப்படுகின்றன. இந்த முறையின் மூலம் காணாமல் போன வாகனங்களை இந்த கேமராக்கள் மூலம் அடையாளம் காணமுடியும்.

வாகன எண்களை ஸ்கேன் செய்து கொண்டே இருக்கும் போது, கட்டுப்பாட்டு அறையில் காணாமல் போன வாகனத்தின் எண்ணை பதிவு செய்தால் போது ஸ்கேன்கள் அந்த வாகனம் எங்கே உள்ளது என்பதை கண்டுபிடித்து விடலாம் என தெரிவிக்கப்படுகிறது.

காவல்துறையினர் வாகன சோதனை செய்து கொண்டிருக்கும் போது நிற்காமல் செல்லும் வாகனங்கள், விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் தப்பித்து செல்லும் வாகனங்கள் உள்ளிட்டவற்றை எளிதாக அடையாளம் காண முடியும் என பல்வேறு சிறப்புகள் இந்த கேமராவில் அடங்கியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories