December 6, 2025, 7:23 AM
23.8 C
Chennai

பட்டம் விட்டு… மின்வாரிய ஊழியர்களை பரிதவிக்க வைக்கும் சிறார்கள்!

kite in power lane

சிறுவர்கள் பட்டம் விட்டு விளையாடி, மின்வாரிய ஊழியர்களைப் பாடாய்ப் படுத்தி எடுக்கிறார்கள். இதனால், கோவையில் ஒரு வாரத்தில் மட்டும், 25 இடங்களில் மின் தடை ஏற்பட்டிருக்கிறது.

கொரோனா பரவலை தடுக்க கோவை மாநகரம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். ஆயினும் சிறுவர்கள் திறந்த வெளியில் கேரம் போர்டு, கிரிக்கெட் விளையாடினாலும் அவற்றை போலீசார் குட்டி விமானங்கள் மூலம் கண்காணித்து விரட்டி விடுகிறார்கள். இதனால் வீட்டு மொட்டை மாடியில் இருந்தவாறு பட்டம் விட்டு சிறுவர்கள் சிலர் பொழுதை கழிக்கிறார்கள். அதிலும் தற்போது பிரச்னை ஏற்பட்டுள்ளது.

தற்போது ஊரடங்கு என்பதால் திறந்தவெளியில் பட்டங்கள் பறக்க விட முடியாது. எனவே வீட்டு மொட்டை மாடியில் நின்று சிறுவர்கள் பட்டங்களை பறக்க விடும் போது பட்டங்கள், தெருவில் உள்ள மின் கம்பங்களில் சிக்கிக் கொள்கின்றன. எனவே சிறுவர்கள் தெருவுக்கு வந்து சிக்கி இருக்கும் பட்டத்தில் இருந்து தொங்கும் நூலை பிடித்து இழுக்கிறார்கள். அவ்வாறு இழுக்கும் போது மின் கம்பங்களில் தனித் தனியாக தொடாமல் உள்ள இரண்டு மின் கம்பிகள் ஒன்றோடொன்று சேர்ந்து விடுகின்றன. அதனால் மின் தடை ஏற்பட்டு அந்தப் பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப் படுகிறது.

kite in eb cables
kite in eb cables

இது குறித்து மின்சாரத் துறை அதிகாரிகள் கூறும்போது,

கோவையில் கடந்த ஒரு வாரமாக மொத்தம் 25 இடங்களில் மின் தடை ஏற்பட்டுள்ளது. கோவை காந்திமாநகர், கணபதி மாநகர், ஆவாரம்பாளையம், ஹோப்காலேஜ், சவுரிபாளையம், உடையாம்பாளையம், சிங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்ந்து பட்டங்கள் மின்கம்பிகளில் சிக்கிக் கொள்வதால் மின் தடை ஏற்படுகிறது. அந்த நேரங்களில் தான் காற்று அதிகமாக வீசுவதால் பட்டங்கள் அதிக அளவில் பறக்க விடப்படுகின்றன.

மின் கம்பங்களில் 4 கம்பிகள் இழுத்து கட்டப்பட்டிருக்கும். இதில் ஏதாவது இரண்டு கம்பிகள் ஒன்றாக சேர்ந்தாலோ அல்லது நெருங்கி வரும் போதோ மின் தடை ஏற்படும். அவை ஒன்றோடொன்று சேராமல் இருப்பதற்காகதத் தான் இடையில் கம்பி போட்டு கட்டப்பட்டிருக்கும். அதில் ஏதாவது ஒரு கம்பியில் பட்டம் சிக்கிக் கொண்டிருந்தால், அதை எடுப்பதற்காக பட்டத்தோடு கட்டப்பட்டு தொங்கிக் கொண்டிருக்கும் மிச்சமிருக்கும் நூலை கீழே இருந்து இழுத்தால் தனித் தனியாக கட்டப்பட்டுள்ள மின் கம்பிகள் இணையும். அப்போது மின் தடை ஏற்படும். மின் கம்பிகள் நன்றாக இழுத்துதான் கட்டப்பட்டிருக்கும். ஆனால் அவ்வளவு உறுதியாக கட்டப்பட்டுள்ள மின் கம்பியையே இணைக்கும் அளவிற்கு பட்டத்துடன் கட்டப்பட்டுள்ள மாஞ்சா நூல் வலுவானதாக உள்ளது.

kites
kites

மின் தடை ஏற்பட்டதும் லைன்மேனை அனுப்பி எந்த இடத்தில் மின் கம்பிகள் இணைந்துள்ளது என்று பார்ப்பதற்கே பல மணி நேரம் ஆகும். அதன் பின்னர் அதை சரி செய்து மின் இணைப்பு கொடுப்பதற்கு மேலும் கால தாமதம் ஏற்படும். பட்டங்களை மீட்க சிலர் இரும்பு கம்பியை பயன்படுத்தினால் அதன் மூலம் மின்சாரம் பாய்ந்து உயிர் இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே எச்சரிக்கையாக இருங்கள் மின் கம்பி அருகே பட்டம் பறக்க விடாதீர்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories