December 6, 2025, 6:58 PM
26.8 C
Chennai

கமலுக்கு போலீஸ் பாதுகாப்பு: அமைச்சர்களின் அடிவருடிகளால் அச்சுறுத்தல்?

kamal house - 2025

சென்னை:

தமிழகத்தில் எல்லாத் துறைகளிலும் ஊழல் பெருக்கெடுத்துள்ளது என்று தமிழக அரசின் மீதும் அமைச்சர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தினாலும் சுமத்தினார், நடிகர் கமலஹாசன் இதுவரை இல்லாத வெளிச்சத்துக்கு வந்துவிட்டார். அதற்கு, அமைச்சர்களின் பதிலடிகளும் மறுப்புரைகளும், மிரட்டல்களுமே காரணம் என்றாகிவிட்டது. இந்நிலையில், கமல்ஹாசனின் வீட்டுக்குப் பாதுகாப்பாக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக, கமல்ஹாசனிடம் அவரது குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருக்கிறதா என்று அமைச்சர்கள் கேட்டனர்.  அதனால், தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் நடக்கும் ஊழல்கள் தொடர்பான ஆதாரத்தை அந்தந்த துறை அமைச்சர்களின் இணைய தள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கும்படி வேண்டுகோள் விடுத்தார் கமல்ஹாசன். இதை அடுத்து,  கமல்ஹாசனின் ஆதரவாளர்களும், சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் ஊழல்கள் குறித்து ஆதாரங்களை திரட்டினார்கள். ஆனால் அமைச்சர்களின் இணைய தள முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் அனைத்தும் திடீரென இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டதால் புகார்களை அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து ஊழல் புகார்களை லஞ்ச ஊழல் தடுப்புப் பிரிவுக்கு அனுப்புங்கள் என்று கமல்ஹாசன் புதிய வேண்டுகோள் விடுத்தார். மேலும் ஆலந்தூரில் உள்ள ஊழல் தடுப்புப் பிரிவு அலுவலகத்தை எப்படி தொடர்பு கொள்வது என்ற விவரத்தையும் அளித்தார்.  இதையடுத்து தமிழக அமைச்சர்களுக்கும் நடிகர் கமல்ஹாசனுக்கும் இடையே வார்த்தைப் போரும் கருத்து மோதலும் வளர்ந்து கொண்டே வருகிறது.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனின் தொடர் கருத்துகள், தமிழக அரசுக்கு எதிராக மக்களைத் தூண்டி விடுவது போல் உள்ளதாக அதிமுக., நிர்வாகிகள் பேசிக் கொண்டனர். எனவே கமலஹாசனின் நடவடிக்கைகளால் அதிருப்தியில் உள்ள அதிமுக., நிர்வாகிகள் மூலம், கமல்ஹாசனுக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்று உளவுத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நடிகர் கமல்ஹாசன் வீட்டுக்கு காவல்துறை சார்பில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சென்னை ஆழ்வார்பேட்டை எல்டாம்ஸ் சாலையும், டிடிகே சாலையும் சந்திக்கும் சிக்னல் பகுதியில் கமல்ஹாசனின் வீடு உள்ளது.  இது, தேனாம்பேட்டை போலீஸ் நிலைய எல்லைக்குள் வருகிறது. ஆனால் தி.நகர் மற்றும் மயிலாப்பூர் போலீஸ் சரகத்தின் மையப் பகுதியாக வீடு அமைந்துள்ளதால் மயிலாப்பூர் காவல் துணை ஆணையர் சரவணன், தி.நகர் காவல் துணை ஆணையர் அரவிந்தன் இருவர் தலைமையிலும் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 13 போலீசார் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கமல்ஹாசன் வீட்டின் முன் பாதுகாப்பில் இருக்கிறார்கள்.  அவரின் வீடு அருகே வந்து செல்லும் அனைவரையும் கண்காணிப்பதுடன், சந்தேகப்படும் நபர்களிடம் உரிய விசாரணை நடத்தவும் அவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், சென்னையில் உள்ள அதிமுக., நிர்வாகிகள் பலரும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.  இந்தப் பணியில் சுமார் 50 போலீசார் ஈடுபட்டுள்ளனராம். தனக்கு அதிக பாதுகாப்பு தேவை என்று எந்தவிதக் கோரிக்கையும் கமல்ஹாசன் விடுக்கவில்லை என்றாலும், அவர் செல்லும் நிகழ்ச்சிகள், விழாக்கள் உள்ள பகுதியிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories