சென்னை:
என்னை சாரணர் அமைப்புத் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று சொல்ல எச்.ராஜாவுக்கு உரிமை இல்லை என்று, பாஜக.,வின் எச்.ராஜா கூறியுள்ளார்.
அவர் இது குறித்து செய்தியாளரிடம் கூறியபோது, “வரும் 16ஆம் தேதி நடைபெறும் சாரண சாரணியர் அமைப்புத் தேர்தலில் நான் போட்டியிடுவேன். இந்தத் தேர்தலில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். சாரண சாரணியர் அமைப்புத் தேர்தலில் என்னை போட்டியிடக்கூடாது என்று சொல்ல ஸ்டாலினுக்கு உரிமை இல்லை. சாரண சாரணியர் அமைப்பினர் கேட்டுக் கொண்டதால் நான் இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறேன்” என்று கூறினார் எச்.ராஜா.
முன்னதாக, சாரணர் அமைப்பின் தலைவராக எச்.ராஜாவை நியமிக்க எடப்பாடி அரசு முயற்சி செய்துவருவதாக, திமுக.,செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றில் விமர்சித்திருந்தார்.