சிவாஜி கணேசன் மணிமண்டபம் திறப்பு: சிலையில் கருணாநிதி பெயர் நீக்கப்பட்டதால் வலுக்கும் எதிர்ப்பு!

சென்னை:
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு அமைந்த மணி மண்டபத்தைத் திறந்து வைத்தார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். அப்போது அவர், அரசியலில் இரு துருவங்களாக இருந்த எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன் இருவரும் ஒரு தாய் பிள்ளைகள் போல வாழ்ந்தவர்கள் என்று பேசினார்.

சென்னை, அடையாறில் தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ளது நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கான மணிமண்டபம். இதனை இன்று காலை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.

அப்போது பேசிய அவர், இந்தியா மட்டுமல்ல அமெரிக்கா போன்ற நாடுகளாலும் பாராட்டப்பட்டவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பெயரில் விருதை அறிவித்தவர் ஜெயலலிதா. தாயை நேசிப்பவர்கள் மிகச் சிறந்த உயரத்துக்கு வருவார்கள். அவர்களில் மக்கள் திலகமும், நடிகர் திலகமும் மிகச் சிறந்த உதாரணங்கள். உலகத் தமிழர்களின் நெஞ்சங்களில் நீங்காத இடம் பிடித்தவர் சிவாஜி கணேசன். அவரின் பெருமைகளை நினைவுகூர்வது தமிழக மக்களுக்கே பெருமை” என்று பேசினார்.

sivaji statue - 2026

இதனிடையே சென்னை மெரினா கடற்கரையில், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பில் அமைந்த சிவாஜி சிலையை அங்கிருந்து அப்புறப்படுத்தி, இந்த மணிமண்டப முகப்பில் வைத்துள்ளார்கள். அதில், சிலையை அப்போது திறந்து வைத்த கருணாநிதியின் பெயர் பீடத்தில் இருந்து நீக்கப்பட்டிருந்தது. இதற்கு மு.க.ஸ்டாலின் முன்னதாக கண்டனம் தெரிவித்திருந்தார். தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே தனது டிவிட்டர் பதிவில் இது குறித்து குறிப்பிட்ட நடிகர் எஸ்.வி.சேகர்,
“சிவாஜி மணி மண்டபம்” புதிய சிலை செய்யாத போது கலைஞரின் பெயர் கல்வெட்டை அகற்றியது அரசியல் அநாகரீகம். தமிழகத்தில் இன்னும் அரசியல் அநாகரீகம் இருப்பதை நிரூபிப்பதின் அடையாளமாக மாபெரும் கலைஞன் சிவாஜி விழாவை பயன் படுத்தியது கேவலம். அம்மாவின் ஆணைப்படி இப்ப திறந்தவங்க பேர் வரணும்னா சிவாஜி பீடத்துல கலைஞர் கல்வெட்டு போக பாக்கி இருக்கிற 3 சைடும் இஷ்டத்துக்கு எழுதிக்கலாமே.” என்று கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Entertainment News

Popular Categories