சிவாஜி கணேசன் மணிமண்டபம் திறப்பு: சிலையில் கருணாநிதி பெயர் நீக்கப்பட்டதால் வலுக்கும் எதிர்ப்பு!

சென்னை:
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு அமைந்த மணி மண்டபத்தைத் திறந்து வைத்தார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். அப்போது அவர், அரசியலில் இரு துருவங்களாக இருந்த எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன் இருவரும் ஒரு தாய் பிள்ளைகள் போல வாழ்ந்தவர்கள் என்று பேசினார்.

சென்னை, அடையாறில் தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ளது நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கான மணிமண்டபம். இதனை இன்று காலை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.

அப்போது பேசிய அவர், இந்தியா மட்டுமல்ல அமெரிக்கா போன்ற நாடுகளாலும் பாராட்டப்பட்டவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பெயரில் விருதை அறிவித்தவர் ஜெயலலிதா. தாயை நேசிப்பவர்கள் மிகச் சிறந்த உயரத்துக்கு வருவார்கள். அவர்களில் மக்கள் திலகமும், நடிகர் திலகமும் மிகச் சிறந்த உதாரணங்கள். உலகத் தமிழர்களின் நெஞ்சங்களில் நீங்காத இடம் பிடித்தவர் சிவாஜி கணேசன். அவரின் பெருமைகளை நினைவுகூர்வது தமிழக மக்களுக்கே பெருமை” என்று பேசினார்.

ALSO READ:  தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

sivaji statue - 2026

இதனிடையே சென்னை மெரினா கடற்கரையில், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பில் அமைந்த சிவாஜி சிலையை அங்கிருந்து அப்புறப்படுத்தி, இந்த மணிமண்டப முகப்பில் வைத்துள்ளார்கள். அதில், சிலையை அப்போது திறந்து வைத்த கருணாநிதியின் பெயர் பீடத்தில் இருந்து நீக்கப்பட்டிருந்தது. இதற்கு மு.க.ஸ்டாலின் முன்னதாக கண்டனம் தெரிவித்திருந்தார். தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே தனது டிவிட்டர் பதிவில் இது குறித்து குறிப்பிட்ட நடிகர் எஸ்.வி.சேகர்,
“சிவாஜி மணி மண்டபம்” புதிய சிலை செய்யாத போது கலைஞரின் பெயர் கல்வெட்டை அகற்றியது அரசியல் அநாகரீகம். தமிழகத்தில் இன்னும் அரசியல் அநாகரீகம் இருப்பதை நிரூபிப்பதின் அடையாளமாக மாபெரும் கலைஞன் சிவாஜி விழாவை பயன் படுத்தியது கேவலம். அம்மாவின் ஆணைப்படி இப்ப திறந்தவங்க பேர் வரணும்னா சிவாஜி பீடத்துல கலைஞர் கல்வெட்டு போக பாக்கி இருக்கிற 3 சைடும் இஷ்டத்துக்கு எழுதிக்கலாமே.” என்று கூறியுள்ளார்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

Topics

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

Entertainment News

Popular Categories