ஏமாற்றிய காதலன்! புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.. போராட்டத்தில் ஈடுபட்ட பெண்!

kowthami

சென்னை முகப்பேர் மேற்கு கர்ணன் தெருவில் பட்டதாரி இளம்பெண் கவுதமி வசித்து வந்தார். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த அவருக்கும், அதேபகுதியைச் சேர்ந்த தண்ணீர் கேன் சப்ளை செய்யும் விஜய் (29) என்ற இளைஞருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் இருவருக்கும் இடையே நாளடைவில் நட்பு காதலாக மாறியது. அப்போது திருமணம் செய்துக்கொள்வதாக கூறி அப்பெண்ணை இளைஞர் விஜய் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அதன்பின்னர் திருமணம் குறித்து கவுதமி பேசும்போதெல்லாம் தவிர்த்து வந்துள்ளார். அதன்பின்னர் சாதியை காரணம் காட்டி அப்பெண்ணை விஜய் திருமணம் செய்ய மறுத்ததாகவும்,

இது குறித்து கேட்டதால் விஜய் மற்றும் அவரது தந்தை, சித்தப்பா உள்ளிட்டோர் கத்தியை காட்டி மிரட்டி தாக்கியதாகவும் அப்பெண் திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார்.

புகாரின் பேரில் போலீசார் விஜய் மீது 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் அவர் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி கவுதமி காவல் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அவருடன் மாதர் சங்கத்தினரும் கலந்து கொண்டனர்.

விஜய் மீது நடவடிக்கை எடுக்காததால் அவர் அண்மையில் வேறொரு பெண்ணை திருமணம் செய்துக்கொண்டதாகவும், தன்னை ஏமாற்றியதாகவும் கூறினார். இந்த போராட்டம் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அங்கு வந்த காவல்துறை அதிகாரிகள் விரைவில் விஜய் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததால் அவர்கள் கலைந்து சென்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Entertainment News

Popular Categories