ஏ.. நாங்க யார் தெரியுமா?.. உதார் விட்ட கொள்ளையர்களை உதைத்து துவைத்த ஊர் மக்கள்!

Robbers 2 - 2026

மாரியம்மன் கோவிலில் கொள்ளையடித்த திருடர்கள் பணத்தை எண்ணிக் கொண்டிருக்கும்போது பொதுமக்களிடம் கையும் களவுமாக சிக்கிய நிலையில், மக்களிடம் சவால் விட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்தி வேலூர் சோற்றுக்கால் மாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவிலில் பரமத்தி வேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 10 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வழிபட்டு வருகின்றனர்.

இன்று அதிகாலை நேரத்தில் தலைக்கவசம் அணிந்து கொண்டு வந்த 3 மர்ம நபர்கள், கோவில் காவலாளியை தாக்கி அறையில் பூட்டி விட்டு, கோவிலின் பூட்டை உடைத்து அம்மனின் தாலி, கிரீடம், நகைகள் மற்றும் ரூபாய் ஐம்பதாயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்து விட்டு சென்றுள்ளனர்.

அறையில் அடைக்கப்பட்ட காவலாளி தனது அலைபேசி மூலமாக கிராம மக்களுக்கு தகவல் தெரிவிக்கவே, காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பரமத்திவேலூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், குற்றவாளிகள் 3 பேரும் கொள்ளையடித்த பணத்தை எண்ணிக் கொண்டிருக்கும் போது பொது மக்களிடம் சிக்கி தர்ம அடி வாங்கி உள்ளனர்.

பரமத்தி வேலூரில் தப்பிய கொள்ளைக்கும்பல், அங்குள்ள கீரம்பூர் பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் பணத்தை எண்ணிக் கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் மூவரையும் பொதுமக்கள் பிடித்து கை, கால்களை கட்டிப் போட்ட நிலையில், மதுரை பேச்சுவழக்கில் பொதுமக்களை மிரட்டியதால் தாராளமாக அவர்களுக்கு தர்ம அடி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்களிடம் அடிவாங்கி பொங்கிய இளைஞர்கள், காவல்துறை வரட்டும் எங்களை கைது செய்யட்டும், அதற்குப் பின்னர் எங்களை பற்றி தெரியும்.

எங்களை அடித்து விட்டீர்கள் அல்லவா?, நாங்கள் வெளியே வந்ததும் இந்த ஊர் எப்படி பதறும் என்று பாருங்கள். மதுரையில் எத்தனை தலையை உருட்டி இருக்கிறோம், இப்ப கத்தி இல்லாமல் உள்ளதால் தப்பித்தீர்கள்.

யூடியூபில் எனது புகைப்படத்தை போட்டு பாருங்க, நான் கல்லூரி மாணவன் தான். பொறுமையை இழந்தால் அவ்வளவுதான். காவல்துறை வந்தாலும் எங்களின் கை, கால்களை உடைக்க தான் முடியும். தூக்கில் போட முடியாது என்று மிரட்டியுள்ளனர்.

பொறுமையை இழந்த பொதுமக்கள், எங்க ஊருக்கு வந்து எங்களையே மிரட்டுகிறாயா? என்று கூறி அடித்து நொறுக்கியுள்ளனர்.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் 3 பேரையும் கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். விசாரணையில், மூவரும் மதுரையை சேர்ந்த ராசு, முருக சூர்யா, கருப்பசாமி என்பதும், இவர்கள் மீது பல்வேறு கொள்ளை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிறைக்கு சென்று வந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. 3 இளைஞர்களும் தற்போது சிறையில் உள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

Topics

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. ஈரான் போர் தாக்கத்தால் விலை உயர்வை தவிர்க்கும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories