புதுச்சேரி: புதுச்சேரியில், ரூ.36 ஆயிரம் கள்ள நோட்டுகளை பாலியல் தொழிலாளி பெண் ஒருவர் வங்கியில் செலுத்த ஒருவரிடம் கொடுத்து விட்டுள்ளார். அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். வங்க தேசத்தைச் சேர்ந்த அந்தப் பெண், புதுவை உள்பட பல்வேறு இடங்களில் பாலியல் தொழிலில் ஈடுபடுவாராம். இந்நிலையில் வில்லியனூர் அருகே கீழ்சாத்தமங்கலத்தைச் சேர்ந்த அய்யனார் என்பவரின் வீட்டில் அவர் தங்கியிருந்தாராம். அப்போது அய்யனாரிடம் ரூ.40 ஆயிரம் பணத்தைக் கொடுத்து மிஷன் வீதியில் உள்ள வங்கி ஒன்றில் தனது கணக்கில் செலுத்தும்படி கூறி அனுப்பிவைத்துள்ளார். அதன்படி அய்யனார் வங்கியில் பணத்தைச் செலுத்திய போது, வங்கி காசாளர் அதில் 36 ஆயிரம் ரூபாய்க்கு கள்ள நோட்டுகள் இருப்பதை அறிந்தார். நூறு ரூபாய் நோட்டுகள் பத்தும், ஐநூறு ரூபாய் நோட்டுகள் 27ம் அதில் இருந்துள்ளன. இதுகுறித்து அவர் வங்கி மேலாளருக்கு தகவல் தெரிவித்தார். அவர் போலீஸில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, போலீசார் அய்யனாரை கைது செய்தனர். அவரிடம் விசாரித்த போது பெண்மணி தன்னிடம் பணத்தைக் கொடுத்தனுப்பியதைக் கூறியுள்ளார். இதை அடுத்து போலீசார் அந்தப் பெண்ணைப் பிடித்து விசாரணை நடத்தியதில், சென்னையை சேர்ந்த சுரேஷ் என்ற வாடிக்கையாளர் தனக்கு இந்தப் பணத்தைக் கொடுத்தார் என்று கூறியுள்ளார். இது கள்ளநோட்டு என்று தெரியாமல் வாங்கி விட்டதகவும், அந்த நபர் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இதனால், போலீஸார் சுரேசை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் மத்திய புலனாய்வுப் பிரிவுக்கும் கள்ள நோட்டு குறித்த விவரத்தைக் கொடுத்துள்ளனர்.
Less than 1 min.Read
கள்ள நோட்டுகளை வங்கியில் செலுத்த முயன்ற பாலியல் தொழில் பெண்மணி
Hot this week
மதுரை
தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!
வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!
சற்றுமுன்
இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!
உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு
ஆன்மிகச் செய்திகள்
சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!
ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
ஆன்மிகச் செய்திகள்
பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!
மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

Topics
மதுரை
தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!
வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!
சற்றுமுன்
இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!
உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு
ஆன்மிகச் செய்திகள்
சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!
ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
ஆன்மிகச் செய்திகள்
பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!
மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை
மதுரை
மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!
இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

