ராமேஸ்வரம் :
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தீவையும் பாம்பன் பகுதியையும் இணைக்கும் பாம்பன் பாலத்தை அனுமதியின்றி ட்ரோன் கேமரா மூலம் படம் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தப் பகுதி பாதுகாக்கப் பட்ட பகுதியாகத் திகழ்கிறது.
இந்நிலையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட வடமாநிலத்தை சேர்ந்த 6 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். இதனை அடுத்து அவர்கள் 6 பேரையும் அழைத்துச் சென்று மத்திய உளவுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்