“ஆண்டாள் சர்ச்சை” இன்று முதல் மீண்டும் உண்ணாவிரதம்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் முடிவு!

ஸ்ரீவில்லிபுத்தூர்:

இந்துக்களின் புனிதமான தெய்வமாகப் போற்றி வணங்கப்படும் ஆண்டாள் அம்மையை அவதூறாகப் பேசிய கவிஞர் வைரமுத்து மன்னிப்பு கேட்க வலியுறுத்தி ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாளமாமுனிகள் மடத்தின் சடகோப ராமானுஜ ஜீயர் இன்று முதல் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்குகிறார்.

கடந்த மாதம் 7ஆம் தேதி, விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கத்தில், தமிழை ஆண்டாள் என்ற தலைப்பில் திரைப்படக் கவிஞர் பாடலாசிரியர் வைரமுத்து, கட்டுரை ஒன்றை வாசித்தார். ராஜபாளையம் மக்கள் தங்கள் குலதெய்வமாகப் போற்றிக் கொண்டாடும் ஆண்டாளைக் குறித்து துவக்கத்தில் இருந்தே சர்ச்சைக்குரிய விதத்தில் பேசி வந்தவர், ஒரு கட்டத்தில் பிறப்பு, தன்மை குறித்து மோசமான விமர்சனத்தை முன்வைத்தார். அதற்கு வெளிநாட்டு ஆராய்ச்சியாளர் பெயரைத் துணைக்கு அழைத்துக் கொண்டு, தன் மனத்தில் உள்ள வக்கிரங்களை மேடையில் உதிர்த்தார். அது, நிகழ்ச்சியைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களை பெரிதும் வருத்தப் படவைத்தது.

நாத்திகராக தன்னைக் காட்டிக் கொண்டு மேடைகளில் பேசி வரும் வைரமுத்து, இந்த நிகழ்ச்சியில் உள்நோக்கத்துடன் இந்து மத தெய்வங்களையும், படைப்புகளையும் இழிவு செய்யும் விதத்தில் பேசியதால், வைரமுத்துவுக்கு எதிராக போராட்டம் வெடித்தது. வைரமுத்து தனது பேச்சுக்கு மனம் வருந்தி, மன்னிப்பு கேட்க வேண்டும் என்று குரல்கள் பலமாக எழுந்தன. இந்நிலையில், தனது பேச்சு யார் மனத்தையாவது புண்படுத்தியிருந்தால், அதற்காக தான் வருந்துவதாக டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டார் வைரமுத்து.

ஆனால், எவர் மனமாவது புண்பட்டிருந்தால், அதற்காக தான் வருந்துவது என்ற வைரமுத்துவின் நிலைப்பாட்டை எவரும் ஏற்கவில்லை. அவர் தனது உள்நோக்கத்துடனான செயலுக்காக வருந்தி, பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று போராட்டங்கள் தொடர்ந்தன.

இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் வைரமுத்து மன்னிப்பு கோர வேண்டும் என்று கூறி உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்தார். ஆனால், அன்பர்களின் வற்புறுத்தலுக்கு இறங்கிவந்து, உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்தார்.

இதை அடுத்து, வைரமுத்து மன்னிப்பு கோர வேண்டும் என்பதை வலியுறுத்தி, இன்று முதல் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் மீண்டும் உண்ணாவிரதத்தை தொடங்க இருக்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

Topics

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Entertainment News

Popular Categories