December 6, 2025, 6:51 AM
23.8 C
Chennai

காதலர் டூ தலைவர்; காகிதப் பூ; விஸ்வரூபம்; கட்டிபுடி வைத்தியர்: கமல் குறித்த கருத்துகள்!

சென்னை:

நடிகர் கமலஹாசன் இன்று அரசியல் களத்தில் குதிக்கிறார். இன்று மாலை அரசியல் கட்சியைத் துவங்குகிறார். இதனிடையே கமலின் அரசியல் குறித்து பலரும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அவர்களில் சிலரின் கருத்துகள்…

கமலை இதுவரை காதலராக பார்த்தோம், இன்று தலைவராக பார்க்கிறோம் என்று கூறியுள்ளார், கவிஞர் சினேகன். சினிமா பாடலாசிரியரும், அண்மையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கடைசி வரை வந்தவருமான சினேகன் கமலுக்கு முன்பே ஆதரவு தெரிவித்திருந்தார்.

”நடிகர்களை காகிதப் பூ என்ற மு.க.ஸ்டாலின் கருத்து சரியானதுதான்” என்று கூறியுள்ளார் அமைச்சர் ஜெயக்குமார். முன்னதாக, காகிதப் பூ மலரும்; மணக்காது என்று கூறியிருந்தார் மு.க.ஸ்டாலின்.

நடிகர் கமல் அரசியல் கட்சி ஆரம்பிப்பது தலைப்புச் செய்திகளாக இருக்கலாம், ஆனால் அவர் ஒரு போதும் தலைவராக முடியாது என்று கூறியுள்ளார் தமிழிசை சௌந்தரராஜன்.

கட்டிப்புடி வைத்தியர் கமல் என்று கூறிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, நேற்று விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசிய போது, நடிகர் கமலுக்கு, தான் என்ன செய்கிறோம் என்பதே தெரியவில்லை. அவர் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சி தலைவர்களையும் சந்தித்து கட்டிப்பிடி வைத்தியம் செய்கிறார். அரசியல் கட்சி தொடங்குபவர்கள் மாற்றுக்கட்சி தலைவர்களை சந்தித்ததாக வரலாறு இல்லை. கமலின் செயல் கேலிக்கூத்தாக உள்ளது. கமலின் அரசியல் கட்சி தமிழகத்தில் விஸ்வரூபம் எடுக்க வாய்ப்பே இல்லை. கமல் கட்சி தொடங்கும் நேரமே சரியில்லை. அவருக்கு சகுனம் சரியில்லை என்று கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories