மூடப்படுகிறது சர்ச்சைக்குரிய பாலேஸ்வரம் செயின்ட் ஜோசப் கருணை இல்லம்

மூடப்படுகிறது சர்ச்சைக்குரிய பாலேஸ்வரம் செயின்ட் ஜோசப் கருணை இல்லம்…

புனித ஜோசப் ஆதரவற்றோர் இல்லத்தில், உயிரிழந்த ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட முதியோர்களின் உடல்களை சட்டவிரோதமாக அடக்கம் செய்த அதிர்ச்சி அம்பலமாகிய நிலையில், காப்பகம் இரண்டு நாட்களில் மூடப்படும் என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் பாலேஷ்வரத்தில் செயல்படும் ஆதரவற்றோர் காப்பகத்தில், முதியோர்களை கடத்துவது, இறந்தவர்களின் எலும்புகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது, உரிமம் புதுப்பிக்காமல் இயங்கியது என அடுக்கடுக்கான அதிர்ச்சித் தரும் புகார்கள் வெளிவந்தன.

இதையடுத்து, காவல்துறை, சுகாதாரத்துறை, சமூக நலத்துறை அதிகாரிகள் காப்பகத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், குற்றச்சாட்டுகள் குறித்து புனித ஜோசப் ஆதரவற்றோர் காப்பக நிர்வாகி தாமஸ் சென்னையில் விளக்கமளித்தார்.

வாகனத்தில் காய்கறி மூட்டைகள் மத்தியில் சடலத்தை கொண்டு வந்தது தவறு தான் என்று அவர் அப்போது ஒப்புக்கொண்டார்.

உரிமம் புதுப்பிக்காமல் இயங்கியது குறித்து விளக்கமளித்த அவர், 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் காப்பக உரிமம் காலாவதி யாகியதாகவும், மாவட்ட நிர்வாகத்திடம் புதுபிப்பதற்காக விண்ணப்பித்தும் கிடப்பில் போடப்பட்டதாக அதிகாரிகள் மீது குற்றம் சாட்டினார்.

மேலும், உடல்களை காப்பகத்தில் அடக்கம் செய்வதற்கு அனுமதி குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், 2011 ஆம் ஆண்டே மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அனுமதி பெற்றதாக கூறினார்.

ஆனால், அவர் காட்டிய ஆவணங்கள், அனுமதி கோரி காப்பகம் சார்பில் விண்ணப்பத்த படிவங்களே தவிர, அனுமதிக்கான ஆவணங்கள் இல்லை.

காப்பகத்திலிருந்து முதியோரை வேறு இடங்களுக்கு மாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், வியாழக்கிழமை முதல் காப்பகம் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

முதியோரின் எலும்புகள் கடத்தப்பட்டதாக எழுந்த புகாரில் சுகாதாரத்துறை மருத்துவர் குழு ஆய்வு நடத்த உள்ளதாகவும் ஆட்சியர் பொன்னையா கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories