ஹெச்.ராஜா மீது ஏன் நடவடிக்கை இல்லை; தமிழிசை சொன்ன விளக்கம்!

சென்னை:

அவர்களை நடவடிக்கை எடுக்கச் சொல்லுங்க, எப்போது பார்த்தாலும் பாஜக., மீதே பாய்கிறீர்களே! என்று கூறியுள்ளார் தமிழிசை சௌந்தர்ராஜன்.

ஹெச்.ராஜா குறித்து கேட்ட கேள்விக்கு பதிலளித்த தமிழக பாஜக., தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், அவர் முகநூலில் பதிவிட்டது தொடர்பாக என்னிடம் கேட்டால் நான் எப்படி கருத்து சொல்வது. இதற்கான கருத்தை நீங்கள் அவரிடம்தான் கேட்க வேண்டும்… என்று கூறினார்

சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் தமிழிசை. அப்போது அவர் கூறியவை…

நாங்கள் நாகரீகமாக கட்சி விரோத நடவடிக்கை என்று சொல்லி திருப்பத்தூரில் பெரியார் சிலையை சேதப்படுத்தியவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி இருக்கிறோம். இணைய தளத்தில் பதிவிட்ட கருத்து தனது கருத்து இல்லை என்றும், தனது அட்மின் போட்டது என்றும், தவறு என்று கருதப் பட்டதால் உடனே நீக்க நடவடிக்கை எடுத்ததாகவும் விளக்கம் கொடுத்துள்ளார். அந்த விளக்கத்தை கட்சி ஏற்றிருக்கிறது. அந்தக் கருத்து தனது கருத்து இல்லை என்று அவர் சொல்லும்போது தூண்டியவர் அவராக இருக்க முடியாது. அதை ஏற்றுக் கொண்டுதான் கட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை… என்று விளக்கம் அளித்துள்ளார் தமிழிசை.

ALSO READ:  சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

தொடர்ந்து, “எங்கள் கட்சியிலும் என் மீது விமர்சனம் வருகிறது. தவறு என்று தெரிந்ததும் நீக்கி இருக்கிறேன். அதுதான் கட்சியின் நிலைப்பாடு. திருவல்லிக்கேணியில் பூணூல் அறுக்கிறார்கள். எங்கள் கட்சி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசுகிறார்கள். வேண்டுமென்றே ஒரு கொதிநிலையில் தமிழகத்தை வைத்திருப்பது எப்படி சரியாக இருக்கும். நான் நடவடிக்கை எடுத்தது போல வன்முறையில் ஈடுபடும் தொண்டர்கள் மீது அவர்களது கட்சியையும் நடவடிக்கை எடுக்கச் சொல்லுங்கள். எப்போதும் பாஜக., மீதே சுட்டிக் காண்பிப்பது எப்படி சரியாக இருக்கும். இந்த வி‌ஷயத்தில் அவரவர் கருத்தை அவரவர் சொல்லலாம். ஆனால் நான் சரி என்று கருத்து சொல்லவில்லை. நாங்கள் எடுக்கும் நடவடிக்கையை மற்ற கட்சியும் எடுக்கட்டும் என்கிறேன்.

கோவிலை இடிப்பேன் என்கிறார்கள். சிலையை உடைப்பேன் என்கிறார்கள். பூணூலை அறுக்கிறார்கள். பெட்ரோல் குண்டு வீசுகிறார்கள்… அவர்கள் மீது முதலில் கட்சி ரீதியான நடவடிக்கை எடுங்கள். ஸ்டாலின் உள்பட எல்லோருக்கும் நான் சொல்லும் செய்தி அதுதான். எந்த விதத்திலும் நேர்மறை அரசியலை எடுத்துச் செல்வோம். எதிர் மறை அரசியல் தேவையில்லை. வளர்ச்சி அரசியல் இருக்கட்டும். கிளர்ச்சி அரசியல் தேவையில்லை.

ALSO READ:  சோழ சாம்ராஜ்யத்தின் வளமான வரலாறும், கலாசாரமும் பெருமிதம் ஏற்படுத்துகிறது: மனதின் குரலில் மோடி!

சிலை விவகாரத்தில் பிரதமர், பாஜக, அகில இந்திய தலைவர் ஆகியோரும் கருத்து சொல்லி இருக்கிறார்கள். பொறுப்பாளர் முரளிதரராவும் நானும் கருத்து பதிவிட்டு இருக்கிறோம். கருத்துக்கு கருத்து மோதல் இருக்கலாம். ஆனால் அது வன்முறையாக மாறக்கூடாது. அதில் தெளிவாக இருக்கிறோம். அதே தெளிவு மற்றவர்களிடமும் இருக்க வேண்டும். எந்த சிலையையும் சேதப்படுத்துவது என்பது பாஜக.,வின் கொள்கையில்லை… என்று கூறினார் தமிழிசை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories