December 5, 2025, 6:16 PM
26.7 C
Chennai

சட்டம் ஒழுங்கு சீர்குலைவை ஏற்படுத்த உள்நோக்கத்துடன் செயல்படுகிறார்கள்: அமைச்சர் ஜெயக்குமார்

jayakumar - 2025

சென்னை:
தமிழகத்துக்கு வந்துள்ள ராம ராஜ்ய ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களின் நோக்கம் சட்டம்-ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்துவதே என அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டினார்.

சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசினார் அமைச்சர் ஜெயக்குமார். அப்போது அவர், இந்தியா என்பது மதச்சார்பற்ற நாடு. இங்கே எந்த மதத்தினரும், எந்த அமைப்பினரும் ஊர்வலம் செல்லலாம். இந்த ரத யாத்திரையை நடத்துவது ஒரு சாதாரண தனியார் அமைப்பு. இந்த ரத யாத்திரைக்கும், ஆர்எஸ்எஸ், விஎச்பி போன்ற அமைப்புகளுக்கும் தொடர்பில்லை. ஆனால் வேண்டுமென்றே இது வி.எச்.பி நடத்தும் யாத்திரை என்று பொய்ப் பிரசாரம் செய்கிறார்கள். இந்த யாத்திரையை நடத்துவது, ராமதாஸா மிஷன் யுனிவர்சல் சொசைட்டி என்ற அமைப்பு. இதற்கும் இந்து அமைப்புகளுக்கும் தொடர்பில்லை என்று விளக்கம் அளித்தார் ஜெயக்குமார்.

மேலும், இந்த ரத யாத்திரையை கேரளா உள்ளிட்ட வேறு பிற மாநிலங்களில் எதிர்க்காதபோது தமிழகத்தில் மட்டும் ஏன் எதிர்க்கிறார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

நெல்லை மாவட்டத்தில் பிறப்பிக்கப்பட்ட 144 தடையுத்தரவு ரத யாத்திரைக்கு பொருந்தாதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், 144 தடை என்பது ரத யாத்திரைக்காக அல்ல, ஒரு குழுவாக எதிர்ப்பு கோஷம் எழுப்புகிறவர்கள்… சட்டம் ஒழுங்கை சீர்குலைக்காமல் இருக்க போடப் பட்டது என்று கூறினார்.

மேலும், ரத யாத்திரை எல்லா மாநிலங்களும் வந்தது இங்கே மட்டும் சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்கும் உள்நோக்கத்துடன் செயல்படுகிறார்கள். அவர்கள் வட மாநிலங்களில் இருந்து கிளம்பி 5 மாநிலங்கள் வழியே இங்கே வந்து, ராமேஸ்வரம் போய், பின் கன்னியாகுமரி போய் அப்படியே ஊருக்கு போய் விடுவார்கள். அவர்கள் அவர்களின் வழியில் அமைதியாக அப்படியே சென்று கொண்டிருக்கிறார்கள். அப்படி இருக்கும் போது அதை தடுத்து சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க நினைப்பதை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது. இது பெரியார் மண், அண்ணா மண், அம்மா மண். இங்கு அப்படி யெல்லாம் யாரோ ஒருவர் ஒரு ரத யாத்திரை நடத்தி மாற்றி விட முடியும் என்பது நடக்காதது என்று கூறினார் ஜெயக்குமார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories