சட்டம் ஒழுங்கு சீர்குலைவை ஏற்படுத்த உள்நோக்கத்துடன் செயல்படுகிறார்கள்: அமைச்சர் ஜெயக்குமார்

jayakumar - 2026

சென்னை:
தமிழகத்துக்கு வந்துள்ள ராம ராஜ்ய ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களின் நோக்கம் சட்டம்-ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்துவதே என அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டினார்.

சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசினார் அமைச்சர் ஜெயக்குமார். அப்போது அவர், இந்தியா என்பது மதச்சார்பற்ற நாடு. இங்கே எந்த மதத்தினரும், எந்த அமைப்பினரும் ஊர்வலம் செல்லலாம். இந்த ரத யாத்திரையை நடத்துவது ஒரு சாதாரண தனியார் அமைப்பு. இந்த ரத யாத்திரைக்கும், ஆர்எஸ்எஸ், விஎச்பி போன்ற அமைப்புகளுக்கும் தொடர்பில்லை. ஆனால் வேண்டுமென்றே இது வி.எச்.பி நடத்தும் யாத்திரை என்று பொய்ப் பிரசாரம் செய்கிறார்கள். இந்த யாத்திரையை நடத்துவது, ராமதாஸா மிஷன் யுனிவர்சல் சொசைட்டி என்ற அமைப்பு. இதற்கும் இந்து அமைப்புகளுக்கும் தொடர்பில்லை என்று விளக்கம் அளித்தார் ஜெயக்குமார்.

மேலும், இந்த ரத யாத்திரையை கேரளா உள்ளிட்ட வேறு பிற மாநிலங்களில் எதிர்க்காதபோது தமிழகத்தில் மட்டும் ஏன் எதிர்க்கிறார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

நெல்லை மாவட்டத்தில் பிறப்பிக்கப்பட்ட 144 தடையுத்தரவு ரத யாத்திரைக்கு பொருந்தாதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், 144 தடை என்பது ரத யாத்திரைக்காக அல்ல, ஒரு குழுவாக எதிர்ப்பு கோஷம் எழுப்புகிறவர்கள்… சட்டம் ஒழுங்கை சீர்குலைக்காமல் இருக்க போடப் பட்டது என்று கூறினார்.

மேலும், ரத யாத்திரை எல்லா மாநிலங்களும் வந்தது இங்கே மட்டும் சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்கும் உள்நோக்கத்துடன் செயல்படுகிறார்கள். அவர்கள் வட மாநிலங்களில் இருந்து கிளம்பி 5 மாநிலங்கள் வழியே இங்கே வந்து, ராமேஸ்வரம் போய், பின் கன்னியாகுமரி போய் அப்படியே ஊருக்கு போய் விடுவார்கள். அவர்கள் அவர்களின் வழியில் அமைதியாக அப்படியே சென்று கொண்டிருக்கிறார்கள். அப்படி இருக்கும் போது அதை தடுத்து சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க நினைப்பதை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது. இது பெரியார் மண், அண்ணா மண், அம்மா மண். இங்கு அப்படி யெல்லாம் யாரோ ஒருவர் ஒரு ரத யாத்திரை நடத்தி மாற்றி விட முடியும் என்பது நடக்காதது என்று கூறினார் ஜெயக்குமார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories