திமுக., மாநாட்டில் அடுத்த தலைமுறைக்கான மேடைப் பேச்சுப் போட்டி நடத்திய ஸ்டாலின்!

Published:

IMG 20180324 WA0035 e1521974612739 - 2026

வேங்கை மகன் கூப்பிட்டாலும் போக மாட்டான், விருமாண்டி மகன் கூப்பிட்டாலும் போக மாட்டான் என்று ஈரோடு மண்டல தி.மு.க. மாநாடு தெறிக்க விடுகிறதாம்! அடுத்த தலைமுறைக்கு மேடைப்பேச்சுப் போட்டியை சத்தமில்லாமல் நடத்திக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின் என்று மாய்ந்து போகிறார்கள் திமுக., இளசுகள்!

ஏதோ  பெரிய அரசியல் எழுச்சி எதிர்பார்ப்புடன் ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் அருகே இரண்டு நாள் மாநாட்டை நடத்திக் கொண்டிருக்கிறது தி.மு.க.

தேர்தல் அரசியலுக்கு இந்த மாநாடு அக்கட்சிக்கு கைகொடுக்கப் போவதாக ஸ்டாலின் நம்பிக் கொண்டு மாநாட்டை நடத்திக் கொண்டிருக்கிறார்.

இந்த மாநாட்டில் முக்கிய நிர்வாகிகள் சிலருக்கு சில தலைப்புகளைக் கொடுத்து பேச வைத்துள்ளார் ஸ்டாலின். அவற்றில், இளைஞர்கள் யார் அழைத்து வருவார்கள்? என்று ஒரு தலைப்பு. சென்னையைச் சேர்ந்த சாதிக் பேசியுள்ளார்.

வேங்கை மகன் அழைத்தால் தமிழக இளைஞர்கள் செல்வார்களா? மாட்டார்கள். விருமாண்டி மகன் அழைத்தார் செல்வார்களா? மாட்டார்கள். ஆனால் முத்தமிழறிஞர் கருணாநிதியின் மகனான எங்கள் தளபதி அழைத்தால் தமிழக இளைஞர்கள் படை திரட்டி வருவார்கள் இது உறுதி… என்று மாநாடுக்கு தொண்டர்களை அழைத்துக் கொண்டு வரும் ஓர் ஏஜெண்டாக தலை நிமிர்ந்தார்.

ALSO READ:  IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

ஈரோட்டைச் சேர்ந்த சத்தியவதி, “தில்லியில் ஒரு நிர்பயா இறந்தததுக்கு தேசமே அந்த மகளை வாரி எடுத்துக் கொண்டு கண்ணீர் வடித்தது. ஆனால் எங்கள் தமிழ்நாட்டில் பசுந்தளிர் ஹாசினியில் ஆரம்பித்து எத்தனையோ சிறுமிகள், இளம்பெண்கள், பெண்கள் துள்ளத் துடிக்க வன்புணர்வுக்கும், கொலைக்கும் ஆளாகியிருக்கிறார்கள். ஆனால் யாரும் கண்டு கொள்வதில்லை. இந்த மாநிலத்தை ஆளும் அதிகார மையமும் கண்டு கொள்ளவில்லை. இதுதான் தமிழனின் நிலை.” என்று, திமுக.,வினர் திரண்டிருந்த மாநாட்டில் கண்ணீர் வடித்தார்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img