புதுச்சேரி: புதுச்சேரியில் நியாய விலைக் கடைகளில் அரசின் சார்பில் வழங்கப் படும் இலவச அரிசிக்குப் பதிலாக, அவர்களுக்கு ரூ.300 மானியம் பணமாக வழங்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார். ரேஷன் கடைகளில் இலவச அரிசி விநியோகத்தில் ஏற்படும் முறைகேடுகளைத் தடுக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

