December 6, 2025, 12:59 AM
26 C
Chennai

காவலர் மீது கொலைவெறித் தாக்குதல்! கைதாகிறார் சீமான்? போலீஸார் குவிப்பு!

seeman protest horz - 2025

சென்னை: சீருடையில் பணியில் இருந்த காவலர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய நாம் தமிழர் கட்சியினர் குறித்து போலீஸில் தொடர்புடைய காவலர் புகார் அளித்தார். இந்நிலையில், சீமானை கைது செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொலை முயற்சி வழக்கில் கைது செய்யும் நோக்கோடு மிக அதிக அளவிலான சிறப்பு அதிரடிப்படையினர் காவல்துறையினர் சீமான் வைக்கப்பட்டிருக்கும் மண்டபத்தில் குவிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், சென்னையில் காவிரிக்காக போராட்டம் நடத்திய தலைவர்களை கைது செய்ய போலீஸார் திட்டமிட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. #CauveryIssue #CauveryProtest #CauveryManagementBoard #TNFight4Cauvery

முன்னதாக, நேற்று முன் தினம் நடைபெற்ற போராட்டத்தில், சீமான் மீது  வழக்கு பதிவு செய்யப் பட்டது. ஆனால் அவர் இந்த வழக்குகளில் கைது செய்யப் படவில்லை. இந்நிலையில், இன்று மீண்டும் கறுப்புக் கொடிப் போராட்டம் என்று வந்து, போலீஸாரால் தடுக்கப் பட்டு மண்டபத்தில் வைக்கப் பட்ட நிலையில்,  அவரை முந்தைய வழக்குகளில் கைது செய்ய திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக, சென்னையில் ஐ.பி.எல் போட்டிகளை நடத்தக் கூடாது என எதிர்ப்புகள் கிளம்பின. சென்னை சேப்பாக்கத்தில் போட்டிகள் தொடங்கும் முன் மைதானத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் அரசியல் கட்சிகள் உள்பட பல்வேறு அமைப்புகள் போராட்டங்கள் நடத்தின. போராட்டம் நடத்தியவர்களை போலீஸார் தடியடி நடத்திக் கலைத்தனர்.

சுமார் 750-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர். நாம் தமிழர் கட்சியினர் உள்ளிட்ட போராட்டக்காரர்கள், கிரிக்கெட் ரசிகர்களையும் போலீஸாரையும் தாக்கியுள்ளனர். போலீஸாரைத் தாக்கும் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. காவலர்கள் தாக்கப்பட்டதற்கு ரஜினிகாந்த் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனங்களைத் தெரிவித்தனர்.

இந்நிலையில், காவலர்களைத் தாக்கியது நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள்தான் என்பது தெரிய வந்தது. இதை அடுத்து, நாம் தமிழர் கட்யைச் சேர்ந்த சுமார் 21 பேர் மீது  வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. பின்னர், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறியபோது, ”ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியை நடத்த எதிர்ப்பு தெரிவித்து அண்ணாசாலையில் போராட்டம் நடந்தது. அதில், சென்னை சங்கர்நகரைச் சேர்ந்த முதல்நிலைக் காவலர் செந்தில்குமார் மற்றும் ஆயுதப்படை காவலர் ஜெயசந்திரன் ஆகியோர் போராட்டக்காரர்களால் தாக்கப்பட்டனர். இதில் அவரது உதடுகள் கிழிந்தன.

செந்தில்குமார், கொடுத்த புகாரின்பேரில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 21 பேர் கைது செய்யப் பட்டனர்.  அதில் சீமான் மீது 47, 148, 341, 294 பி (பொது இடங்களில் தகாத வார்த்தைகளால் பேசுதல்), 324, 332, 336 (சட்டவிரோதமாக கூடுதல்), 353 (ஆயுதங்களால் தாக்குதல்), 307 (கொலை முயற்சி), 506 (11) (கொலை மிரட்டல்) ஆகிய 10 பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. இதில் ஜாமீனில் வெளிவர முடியாத வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

செந்தில் குமாரைத் தாக்கியதாக நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 10 பேர் மீது தடையை மீறி சென்றதாக கைது செய்யப்பட்டுள்ளனர். காவலர் ஜெயசந்திரன் கொடுத்த புகாரில் அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கியதாகக் குறிப்பிட்டுள்ளார். அவர்களையும் தேடி வருகிறோம். இது தவிர ஊர்வலத்தில் தடையை மீறிச் சென்றதாக போராட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் மற்றும் 500 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளோம்” என்றார்.

இந்நிலையில் சென்னையில் இன்று பிரதமருக்கு எதிராக போராட்டம் மற்றும் கருப்புக் கொடி காட்டியதாக 8 எம்எல்ஏக்கள் உட்பட 3,070 பேர் கைது செய்யப் பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதனூடே சீமானை முந்தைய ஜாமீனில் வெளிவர இயலாத வழக்குகளில் கைது செய்ய காவல் துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories