February 22, 2026, 3:45 AM
25.6 C
Chennai

பெண்களுக்கு வளைகாப்பு நடத்தி மத்திய அரசின் நலத் திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

madurai nirmala sitharaman valaikappu - 2026

ராமநாதபுரம்: மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன், நேற்று ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், பெண்களுக்கு வளைகாப்பு நடத்தி வைத்தார்.

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், ராமநாதபுரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் மத்திய அரசுத் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்தார். இதன் ஒரு பகுதியாக, நேற்று பரமக்குடி ஒன்றியத்துக்கு உட்பட்ட கள்ளிக்குடி கிராமத்துக்கு வருந்த நிர்மலா சீதாராமனுக்கு கிராம மக்கள் சார்பில் பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் அவர், கிராமத்தைச் சேர்ந்த 3 கர்ப்பிணிப் பெண்களுக்கு நடந்த சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர்களுக்கு வளையல்கள் அணிவித்து நெற்றியில் திலகமிட்டு வாழ்த்து கூறினார்.

கள்ளிக்குடி கிராமத்தில் அப்பகுதிப் பெண்கள், நிர்மலா சீதாராமனிடம் தங்கள் பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதாகவும், ஒரு குடம் குடிநீர் ரூ.10 வரை விலை கொடுத்து வாங்குவதாகவும் கூறினர். இதைக் கேட்டு, உடனடியாக கிராமத்துக்கு டேங்கர் லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் கேட்டுக் கொண்டார். அதன் பின்னரும் குடிநீர் வரவில்லை எனில், தனக்கு மெஸேஜ் அனுப்பும்படி கிராம மக்களிடம் கூறினார்.

 

தொடர்ந்து கள்ளிக்குடி, கலையூர் கிராமங்களில் நடந்த விழாக்களில் பங்கேற்ற அவர், முத்ரா வங்கிக் கடன் உதவி, இலவச கேஸ் அடுப்பு, இலவச எல்.ஈ.டி பல்புகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் பரமக்குடி துணை ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட அதிகாரிகளுடன் மத்திய அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்படும் நிலை குறித்து கேட்டறிந்தார்.

அமைச்சருடன் மத்திய அரசு வழிகாட்டுதல் அலுவர் கோபாலகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் நடராஜன் உள்ளிட்ட அதிகாரிகளும், பா.ஜ.க மாநில துணைத் தலைவர்கள் குப்புராமு, சுப.நாகராஜன், மாவட்ட நிர்வாகிகள் முரளிதரன், ஆத்மகார்த்தி, சண்முகராஜா உள்ளிட்ட பாஜ., கட்சியினரும் பங்கேற்றனர்.

 

2 COMMENTS

  1. மங்களகரமான வரவு ,தங்கள் வரவு நல்வரவாகுக

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories