பெண்களுக்கு வளைகாப்பு நடத்தி மத்திய அரசின் நலத் திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

madurai nirmala sitharaman valaikappu - 2026

ராமநாதபுரம்: மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன், நேற்று ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், பெண்களுக்கு வளைகாப்பு நடத்தி வைத்தார்.

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், ராமநாதபுரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் மத்திய அரசுத் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்தார். இதன் ஒரு பகுதியாக, நேற்று பரமக்குடி ஒன்றியத்துக்கு உட்பட்ட கள்ளிக்குடி கிராமத்துக்கு வருந்த நிர்மலா சீதாராமனுக்கு கிராம மக்கள் சார்பில் பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் அவர், கிராமத்தைச் சேர்ந்த 3 கர்ப்பிணிப் பெண்களுக்கு நடந்த சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர்களுக்கு வளையல்கள் அணிவித்து நெற்றியில் திலகமிட்டு வாழ்த்து கூறினார்.

கள்ளிக்குடி கிராமத்தில் அப்பகுதிப் பெண்கள், நிர்மலா சீதாராமனிடம் தங்கள் பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதாகவும், ஒரு குடம் குடிநீர் ரூ.10 வரை விலை கொடுத்து வாங்குவதாகவும் கூறினர். இதைக் கேட்டு, உடனடியாக கிராமத்துக்கு டேங்கர் லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் கேட்டுக் கொண்டார். அதன் பின்னரும் குடிநீர் வரவில்லை எனில், தனக்கு மெஸேஜ் அனுப்பும்படி கிராம மக்களிடம் கூறினார்.

 

தொடர்ந்து கள்ளிக்குடி, கலையூர் கிராமங்களில் நடந்த விழாக்களில் பங்கேற்ற அவர், முத்ரா வங்கிக் கடன் உதவி, இலவச கேஸ் அடுப்பு, இலவச எல்.ஈ.டி பல்புகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் பரமக்குடி துணை ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட அதிகாரிகளுடன் மத்திய அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்படும் நிலை குறித்து கேட்டறிந்தார்.

அமைச்சருடன் மத்திய அரசு வழிகாட்டுதல் அலுவர் கோபாலகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் நடராஜன் உள்ளிட்ட அதிகாரிகளும், பா.ஜ.க மாநில துணைத் தலைவர்கள் குப்புராமு, சுப.நாகராஜன், மாவட்ட நிர்வாகிகள் முரளிதரன், ஆத்மகார்த்தி, சண்முகராஜா உள்ளிட்ட பாஜ., கட்சியினரும் பங்கேற்றனர்.

 

2 COMMENTS

  1. மங்களகரமான வரவு ,தங்கள் வரவு நல்வரவாகுக

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories