December 5, 2025, 5:23 PM
27.9 C
Chennai

பெண்களுக்கு வளைகாப்பு நடத்தி மத்திய அரசின் நலத் திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

madurai nirmala sitharaman valaikappu - 2025

ராமநாதபுரம்: மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன், நேற்று ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், பெண்களுக்கு வளைகாப்பு நடத்தி வைத்தார்.

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், ராமநாதபுரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் மத்திய அரசுத் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்தார். இதன் ஒரு பகுதியாக, நேற்று பரமக்குடி ஒன்றியத்துக்கு உட்பட்ட கள்ளிக்குடி கிராமத்துக்கு வருந்த நிர்மலா சீதாராமனுக்கு கிராம மக்கள் சார்பில் பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் அவர், கிராமத்தைச் சேர்ந்த 3 கர்ப்பிணிப் பெண்களுக்கு நடந்த சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர்களுக்கு வளையல்கள் அணிவித்து நெற்றியில் திலகமிட்டு வாழ்த்து கூறினார்.

கள்ளிக்குடி கிராமத்தில் அப்பகுதிப் பெண்கள், நிர்மலா சீதாராமனிடம் தங்கள் பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதாகவும், ஒரு குடம் குடிநீர் ரூ.10 வரை விலை கொடுத்து வாங்குவதாகவும் கூறினர். இதைக் கேட்டு, உடனடியாக கிராமத்துக்கு டேங்கர் லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் கேட்டுக் கொண்டார். அதன் பின்னரும் குடிநீர் வரவில்லை எனில், தனக்கு மெஸேஜ் அனுப்பும்படி கிராம மக்களிடம் கூறினார்.

 

தொடர்ந்து கள்ளிக்குடி, கலையூர் கிராமங்களில் நடந்த விழாக்களில் பங்கேற்ற அவர், முத்ரா வங்கிக் கடன் உதவி, இலவச கேஸ் அடுப்பு, இலவச எல்.ஈ.டி பல்புகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் பரமக்குடி துணை ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட அதிகாரிகளுடன் மத்திய அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்படும் நிலை குறித்து கேட்டறிந்தார்.

அமைச்சருடன் மத்திய அரசு வழிகாட்டுதல் அலுவர் கோபாலகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் நடராஜன் உள்ளிட்ட அதிகாரிகளும், பா.ஜ.க மாநில துணைத் தலைவர்கள் குப்புராமு, சுப.நாகராஜன், மாவட்ட நிர்வாகிகள் முரளிதரன், ஆத்மகார்த்தி, சண்முகராஜா உள்ளிட்ட பாஜ., கட்சியினரும் பங்கேற்றனர்.

 

2 COMMENTS

  1. மங்களகரமான வரவு ,தங்கள் வரவு நல்வரவாகுக

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories