நிர்மலா தேவி விவகாரம்: சந்தானம் விசாரணை நிறைவு?

Published:

nirmaladevi investigation officer santhanam - 2026

மதுரை: அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் மூன்றாம் கட்ட விசாரணைக்கு மேல் நீடிக்கும் திட்டமில்லை என்று ஆளுநரால் நியமிக்கப்பட்ட விசாரணை அதிகாரி சந்தானம் கூறியுள்ளார்.

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில், மூன்றாம் கட்ட விசாரணைக்கு மேல் நீட்டிக்கும் திட்டமில்லை என்று ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது, இதனைத் தெரிவித்தார். நிர்மலா தேவி விவகாரத்தில் ஏற்கெனவே சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப் பட்டு விசாரணையில் இருக்கும் உதவிப் பேராசிரியர் முருகனிடம் தாம் 3 மணி நேரம் விசாரணை மேற்கொண்டதாகவும், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியிடம் இரண்டு மணி நேரம் விசாரணை மேற்கொண்டதாகவும் கூறிய சந்தானம், தமக்குக் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் அடுத்த கட்டத்தை நோக்கி விசாரணை நகர்வதாகத் தெரிவித்தார்.

இருப்பினும், ஏற்கெனவே கால நீட்டிப்பு பெற்று அவகாசம் பெற்றுள்ளதால், அதற்கு மேலும் விசாரணையை நீட்டிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்றார் அவர்.

ALSO READ:  சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img