December 5, 2025, 9:17 PM
26.6 C
Chennai

வணிகர் தினக் கூட்ட மேடையில் ஸ்டாலினுடன் ராமதாஸ் பங்கேற்பு: கிங் மேக்கரா? கேங் ஜோக்கரா?

vanigar sangam - 2025

சென்னை: சென்னை வேலப்பன் சாவடி அருகே இன்று காலை நடைபெற்ற வணிகர் தின மாநாட்டின் மேடையில், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுடன் பாமக நிறுவனர் ராமதாஸும் பங்கேற்று இருவரும் அருகருகே அமர்ந்திருந்தனர்.

மே 5ஆம் தேதி வணிகர் தினமாகக் கொண்டாடப் படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு, சென்னை வேலப்பன்சாவடியில், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில், மாநாடு இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது.

இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கிய மாநாட்டில், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன், காங்கிரஸ் எம்.எல்.ஏ. வசந்தகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டின் மேடையில், மு.க.ஸ்டாலினும், ராமதாஸும் அருகருகே அமர்ந்திருந்தனர்.

முன்னதாக, பாமக., குறித்து திமுக., ஒரு தகவலைப் பரப்பி விட்டது. கூட்டணி குறித்த பேச்சுக்கள் தலை எடுத்தன. காவிரி விவகாரத்தில் திமுக., சார்பில் சாய்ந்தது பாமக., இரு தரப்பும் தனித்தனியே போராட்டங்களை நடத்தினாலும், ஒருவருக்கு ஒருவர் உதவிக் கொண்டு போராட்டங்களில் கலந்து கொண்டனர். தொடர்ந்து இரு கட்சிகளுக்கும் இடையே நெருக்கம் ஏற்படுவதாக பரவலாகப் பேசப்பட்டது.

இதை அடுத்து, பாட்டாளி மக்கள் கட்சி மீண்டும் கிங் மேக்கராக மாறுகிறது; கூட்டணிக்கு தயாராகிறது என்பதெல்லாம் திமுகவால் பரப்பப்படும் வதந்திகள். அவற்றை நம்ப வேண்டாம். கவனம் சிதறாமல் இலக்கை நோக்கி பயணிப்போம்! – என்று ராமதாஸ் டிவிட்டர் அறிக்கை விட்டார். காரணம், அன்புமணியை மையமாக வைத்து அடுத்த தலைமுறை அரசியலை மேற்கொள்ள ராமதாஸ் திட்டமிடுவதுதான்!

இதுவரையிலும், பாமக., இரு திராவிடக் கட்சிகளுடன் மாறி மாறி கூட்டணி வைத்து மத்தியில் பலன் பெற்றது என்றாலும், மாநிலத்தில் கூட்டணி ஆட்சி அமையாமல், இரு திராவிடக் கட்சிகளின் முழு ஆதிக்க ஆட்சியே அமைந்து வந்தது. இதனால் தங்கள் செல்வாக்கு வளராமல் ஆட்சியில் பங்கு கிடைக்காமல் போவதை உணர்ந்து ராமதாஸ், இனி இரு திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்தார்.

 

இப்போதும் அப்படி ஒரு நிலைப்பாட்டைத்தான் அவர் வெளிப்படுத்தியிருக்கிறார் என்றாலும், திமுக.,வுக்கு முட்டுக் கொடுக்கும் அவரது போக்கு, பாமக.,வினரிடையே திமுக.,வுடன் கட்சித் தலைமை சாய்கிறது என்ற எண்ணத்தையே ஏற்படுத்தியுள்ளது.

அதற்கு ஏற்றார்ப் போல், இன்னொரு டிவிட்டர் பதிவில், திமுக.,வுக்கு வக்காலத்து வாங்கியும் அதிமுக.,வை விமர்சனம் செய்தும் பதிவிட்டிருந்தார்.

ஓராயிரம் ஸ்டாலின்கள் வந்தாலும் அதிமுகவை தொட்டுக்கூட பார்க்க முடியாது: எடப்பாடி பழனிச்சாமி – உண்மை தான். பினாமிகளின் செயல்பாடுகளால் அந்த அளவுக்கு அருவருக்கத்தக்கதாக அதிமுக மாறிவிட்டது!- என்று கூறியிருந்தார். இந்நிலையில், இன்று திமுக.,செயல் தலைவர் ஸ்டாலினுடன் அருகருகே அமர்ந்து கொண்டு, ஒரு செய்தியை கட்சியினருக்கு காட்டியுள்ளார். எனவே தாம் ஒரு கிங் மேக்கராக மாறி வருவதாகக் கூறிக் கொண்டாலும், அது கேங் ஜோக்கராகத்தான் வெளிப்பட்டு வருகிறது!

1 COMMENT

  1. மிக மிக வருத்தமான போக்கு. திமுகவை முற்றிலும் தவிர்த்து அன்புமணியை மட்டுமே முன்னிலை படுத்த வேண்டும். ஊசலாட்டம் வேண்டாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories