வணிகர் தினக் கூட்ட மேடையில் ஸ்டாலினுடன் ராமதாஸ் பங்கேற்பு: கிங் மேக்கரா? கேங் ஜோக்கரா?

vanigar sangam - 2026

சென்னை: சென்னை வேலப்பன் சாவடி அருகே இன்று காலை நடைபெற்ற வணிகர் தின மாநாட்டின் மேடையில், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுடன் பாமக நிறுவனர் ராமதாஸும் பங்கேற்று இருவரும் அருகருகே அமர்ந்திருந்தனர்.

மே 5ஆம் தேதி வணிகர் தினமாகக் கொண்டாடப் படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு, சென்னை வேலப்பன்சாவடியில், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில், மாநாடு இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது.

இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கிய மாநாட்டில், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன், காங்கிரஸ் எம்.எல்.ஏ. வசந்தகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டின் மேடையில், மு.க.ஸ்டாலினும், ராமதாஸும் அருகருகே அமர்ந்திருந்தனர்.

முன்னதாக, பாமக., குறித்து திமுக., ஒரு தகவலைப் பரப்பி விட்டது. கூட்டணி குறித்த பேச்சுக்கள் தலை எடுத்தன. காவிரி விவகாரத்தில் திமுக., சார்பில் சாய்ந்தது பாமக., இரு தரப்பும் தனித்தனியே போராட்டங்களை நடத்தினாலும், ஒருவருக்கு ஒருவர் உதவிக் கொண்டு போராட்டங்களில் கலந்து கொண்டனர். தொடர்ந்து இரு கட்சிகளுக்கும் இடையே நெருக்கம் ஏற்படுவதாக பரவலாகப் பேசப்பட்டது.

இதை அடுத்து, பாட்டாளி மக்கள் கட்சி மீண்டும் கிங் மேக்கராக மாறுகிறது; கூட்டணிக்கு தயாராகிறது என்பதெல்லாம் திமுகவால் பரப்பப்படும் வதந்திகள். அவற்றை நம்ப வேண்டாம். கவனம் சிதறாமல் இலக்கை நோக்கி பயணிப்போம்! – என்று ராமதாஸ் டிவிட்டர் அறிக்கை விட்டார். காரணம், அன்புமணியை மையமாக வைத்து அடுத்த தலைமுறை அரசியலை மேற்கொள்ள ராமதாஸ் திட்டமிடுவதுதான்!

இதுவரையிலும், பாமக., இரு திராவிடக் கட்சிகளுடன் மாறி மாறி கூட்டணி வைத்து மத்தியில் பலன் பெற்றது என்றாலும், மாநிலத்தில் கூட்டணி ஆட்சி அமையாமல், இரு திராவிடக் கட்சிகளின் முழு ஆதிக்க ஆட்சியே அமைந்து வந்தது. இதனால் தங்கள் செல்வாக்கு வளராமல் ஆட்சியில் பங்கு கிடைக்காமல் போவதை உணர்ந்து ராமதாஸ், இனி இரு திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்தார்.

 

இப்போதும் அப்படி ஒரு நிலைப்பாட்டைத்தான் அவர் வெளிப்படுத்தியிருக்கிறார் என்றாலும், திமுக.,வுக்கு முட்டுக் கொடுக்கும் அவரது போக்கு, பாமக.,வினரிடையே திமுக.,வுடன் கட்சித் தலைமை சாய்கிறது என்ற எண்ணத்தையே ஏற்படுத்தியுள்ளது.

அதற்கு ஏற்றார்ப் போல், இன்னொரு டிவிட்டர் பதிவில், திமுக.,வுக்கு வக்காலத்து வாங்கியும் அதிமுக.,வை விமர்சனம் செய்தும் பதிவிட்டிருந்தார்.

ஓராயிரம் ஸ்டாலின்கள் வந்தாலும் அதிமுகவை தொட்டுக்கூட பார்க்க முடியாது: எடப்பாடி பழனிச்சாமி – உண்மை தான். பினாமிகளின் செயல்பாடுகளால் அந்த அளவுக்கு அருவருக்கத்தக்கதாக அதிமுக மாறிவிட்டது!- என்று கூறியிருந்தார். இந்நிலையில், இன்று திமுக.,செயல் தலைவர் ஸ்டாலினுடன் அருகருகே அமர்ந்து கொண்டு, ஒரு செய்தியை கட்சியினருக்கு காட்டியுள்ளார். எனவே தாம் ஒரு கிங் மேக்கராக மாறி வருவதாகக் கூறிக் கொண்டாலும், அது கேங் ஜோக்கராகத்தான் வெளிப்பட்டு வருகிறது!

1 COMMENT

  1. மிக மிக வருத்தமான போக்கு. திமுகவை முற்றிலும் தவிர்த்து அன்புமணியை மட்டுமே முன்னிலை படுத்த வேண்டும். ஊசலாட்டம் வேண்டாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories