மூத்த தலைமுறை நகைச்சுவை நடிகர் நீலு காலமானார்

neelu neelakantan - 2026

மூத்த தலைமுறையைச் சேர்ந்த பழம்பெரும் நடிகர் நீலு என்ற ஆர். நீலகண்டன் உடல் நலக்குறைவால் வியாழக்கிழமை இன்று காலமானார். அவருக்கு வயது 82.

திரைப்படங்கள் காலத்துக்கு முன்னர் நாடக உலகில் கோலோச்சியவர். நகைச்சுவை நாடகங்கள் பலவற்றில் தூக்கலான நகைச்சுவையை வெளிப்படுத்தி ரசிகர்களை மகிழ்வித்தவர். குறிப்பாக, தனது கனத்த கண்ணாடியை மேலும் கீழும் ஏற்றி இறக்கி, கண்களை உருட்டி, பற்களை வெளிக்காட்டி கோணல் வாயுடன் அவர் வெளிப்படுத்தும் வசனங்கள், ரசிகர்களை உடனே சிரிக்க வைப்பவையாகத் திகழ்ந்தன.

பழம் பெரும் நாடக நடிகர்கள் சோ ராமசாமி, ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.வி.சேகர், மௌலி உள்ளிட்டோரின் நாடகக் குழுக்களில் நடித்தவர். சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாடக மேடைகளில் களம் கண்டவர். குறிப்பாக பள்ளிக் கூட நாட்களிலேயே மேடை நாடகங்களில் நடிக்க வந்துவிட்டவர் நீலு.

சோ ராமசாமியின் தம்பி அம்பியுடன் இணைந்து விவேகா ஃபைன் ஆர்ட்ஸ் என்ற நாடகக் கம்பெனியை துவக்கி நடத்தினார். மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் க்ளப்களில் இவருடைய நாடகங்களை அண்மைக் காலம் வரையில் பார்த்து ரசித்தவர்கள் பலர். சோ ராமசாமியுடன் இணைந்து இவர் நடித்த ‘எங்கே பிராமணன்’ தொடரில் பாகவதர் வேடத்தில் நடித்த இவரது நடிப்பு, மிகவும் புகழ் பெற்றது.

ALSO READ:  திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

சோ ராமசாமியின் நாடகங்கள் நீலு இல்லாமல் களை கட்டியதில்லை. யாருக்கும் வெட்கமில்லை, முகமது பின் துக்ளக், உண்மையே உன் விலை என்ன, என்று தணியும் இந்த சுதந்திர தாகம் என நாடகங்கள் நீலுவுடன் இணைந்தே இன்றளவும் ரசிகர் நெஞ்சங்களில் ஆழப் பதிந்துள்ளன.

1960இல் துவங்கி கிட்டத்தட்ட அறுபதாண்டு நாடக மேடை வாழ்க்கையைத் தொட்டுவிட்டவர். நாடக மேடைகள் மட்டுமல்லாது திரைப்படங்களிலும் சிறிய வயதிலேயே வந்துவிட்டார். 1966 இல் இவர் அறிமுகமான முதல் திரைப் படம் ஆயிரம் பொய். இந்தப் படத்தை இயக்கியவர் முக்தா சீனிவாசன்.

தொடர்ந்து நூற்றுக்கு நூறு, கெரளவம், பாரத விலாஸ், முகமது பின் துக்ளக், வேலும் மயிலும் துணை என கறுப்பு வெள்ளைத் திரைப்படங்களாகட்டும், அண்மைக் கால வண்ணப் படங்களான கமலின் அவ்வை சண்முகி, காதலா காதலா, பம்பல் கே சம்பந்தம், அஜித்தின் தீனா, விக்ரமின் அந்நியன், 2013ல் வந்த கல்யாண சமையல் சாதம் என 160க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நகைச்சுவை கதாபாத்திரத்திலும் குணசித்திர வேடத்திலும் நடித்தவர் நீலு.

ALSO READ:  தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

அண்மைக் காலமாக உடல் நலம்குன்றி இருந்த நீலு, இன்று மாலை காலமானார்.

3 COMMENTS

  1. பழக இனியவர்.நல்ல நகைச்சுவை நடிகரை தமிழ் நாடு இழந்து விட்டது

  2. தமிழக திரைப்பட துறைக்கு ஒரு பெரும் இழப்பு. ஒரு நல்ல கலைஞரை இழந்துவிட்டது தமிழகம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories