மூத்த தலைமுறை நகைச்சுவை நடிகர் நீலு காலமானார்

neelu neelakantan - 2026

மூத்த தலைமுறையைச் சேர்ந்த பழம்பெரும் நடிகர் நீலு என்ற ஆர். நீலகண்டன் உடல் நலக்குறைவால் வியாழக்கிழமை இன்று காலமானார். அவருக்கு வயது 82.

திரைப்படங்கள் காலத்துக்கு முன்னர் நாடக உலகில் கோலோச்சியவர். நகைச்சுவை நாடகங்கள் பலவற்றில் தூக்கலான நகைச்சுவையை வெளிப்படுத்தி ரசிகர்களை மகிழ்வித்தவர். குறிப்பாக, தனது கனத்த கண்ணாடியை மேலும் கீழும் ஏற்றி இறக்கி, கண்களை உருட்டி, பற்களை வெளிக்காட்டி கோணல் வாயுடன் அவர் வெளிப்படுத்தும் வசனங்கள், ரசிகர்களை உடனே சிரிக்க வைப்பவையாகத் திகழ்ந்தன.

பழம் பெரும் நாடக நடிகர்கள் சோ ராமசாமி, ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.வி.சேகர், மௌலி உள்ளிட்டோரின் நாடகக் குழுக்களில் நடித்தவர். சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாடக மேடைகளில் களம் கண்டவர். குறிப்பாக பள்ளிக் கூட நாட்களிலேயே மேடை நாடகங்களில் நடிக்க வந்துவிட்டவர் நீலு.

சோ ராமசாமியின் தம்பி அம்பியுடன் இணைந்து விவேகா ஃபைன் ஆர்ட்ஸ் என்ற நாடகக் கம்பெனியை துவக்கி நடத்தினார். மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் க்ளப்களில் இவருடைய நாடகங்களை அண்மைக் காலம் வரையில் பார்த்து ரசித்தவர்கள் பலர். சோ ராமசாமியுடன் இணைந்து இவர் நடித்த ‘எங்கே பிராமணன்’ தொடரில் பாகவதர் வேடத்தில் நடித்த இவரது நடிப்பு, மிகவும் புகழ் பெற்றது.

சோ ராமசாமியின் நாடகங்கள் நீலு இல்லாமல் களை கட்டியதில்லை. யாருக்கும் வெட்கமில்லை, முகமது பின் துக்ளக், உண்மையே உன் விலை என்ன, என்று தணியும் இந்த சுதந்திர தாகம் என நாடகங்கள் நீலுவுடன் இணைந்தே இன்றளவும் ரசிகர் நெஞ்சங்களில் ஆழப் பதிந்துள்ளன.

1960இல் துவங்கி கிட்டத்தட்ட அறுபதாண்டு நாடக மேடை வாழ்க்கையைத் தொட்டுவிட்டவர். நாடக மேடைகள் மட்டுமல்லாது திரைப்படங்களிலும் சிறிய வயதிலேயே வந்துவிட்டார். 1966 இல் இவர் அறிமுகமான முதல் திரைப் படம் ஆயிரம் பொய். இந்தப் படத்தை இயக்கியவர் முக்தா சீனிவாசன்.

தொடர்ந்து நூற்றுக்கு நூறு, கெரளவம், பாரத விலாஸ், முகமது பின் துக்ளக், வேலும் மயிலும் துணை என கறுப்பு வெள்ளைத் திரைப்படங்களாகட்டும், அண்மைக் கால வண்ணப் படங்களான கமலின் அவ்வை சண்முகி, காதலா காதலா, பம்பல் கே சம்பந்தம், அஜித்தின் தீனா, விக்ரமின் அந்நியன், 2013ல் வந்த கல்யாண சமையல் சாதம் என 160க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நகைச்சுவை கதாபாத்திரத்திலும் குணசித்திர வேடத்திலும் நடித்தவர் நீலு.

அண்மைக் காலமாக உடல் நலம்குன்றி இருந்த நீலு, இன்று மாலை காலமானார்.

3 COMMENTS

  1. பழக இனியவர்.நல்ல நகைச்சுவை நடிகரை தமிழ் நாடு இழந்து விட்டது

  2. தமிழக திரைப்பட துறைக்கு ஒரு பெரும் இழப்பு. ஒரு நல்ல கலைஞரை இழந்துவிட்டது தமிழகம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories