December 5, 2025, 3:30 PM
27.9 C
Chennai

மூத்த தலைமுறை நகைச்சுவை நடிகர் நீலு காலமானார்

neelu neelakantan - 2025

மூத்த தலைமுறையைச் சேர்ந்த பழம்பெரும் நடிகர் நீலு என்ற ஆர். நீலகண்டன் உடல் நலக்குறைவால் வியாழக்கிழமை இன்று காலமானார். அவருக்கு வயது 82.

திரைப்படங்கள் காலத்துக்கு முன்னர் நாடக உலகில் கோலோச்சியவர். நகைச்சுவை நாடகங்கள் பலவற்றில் தூக்கலான நகைச்சுவையை வெளிப்படுத்தி ரசிகர்களை மகிழ்வித்தவர். குறிப்பாக, தனது கனத்த கண்ணாடியை மேலும் கீழும் ஏற்றி இறக்கி, கண்களை உருட்டி, பற்களை வெளிக்காட்டி கோணல் வாயுடன் அவர் வெளிப்படுத்தும் வசனங்கள், ரசிகர்களை உடனே சிரிக்க வைப்பவையாகத் திகழ்ந்தன.

பழம் பெரும் நாடக நடிகர்கள் சோ ராமசாமி, ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.வி.சேகர், மௌலி உள்ளிட்டோரின் நாடகக் குழுக்களில் நடித்தவர். சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாடக மேடைகளில் களம் கண்டவர். குறிப்பாக பள்ளிக் கூட நாட்களிலேயே மேடை நாடகங்களில் நடிக்க வந்துவிட்டவர் நீலு.

சோ ராமசாமியின் தம்பி அம்பியுடன் இணைந்து விவேகா ஃபைன் ஆர்ட்ஸ் என்ற நாடகக் கம்பெனியை துவக்கி நடத்தினார். மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் க்ளப்களில் இவருடைய நாடகங்களை அண்மைக் காலம் வரையில் பார்த்து ரசித்தவர்கள் பலர். சோ ராமசாமியுடன் இணைந்து இவர் நடித்த ‘எங்கே பிராமணன்’ தொடரில் பாகவதர் வேடத்தில் நடித்த இவரது நடிப்பு, மிகவும் புகழ் பெற்றது.

சோ ராமசாமியின் நாடகங்கள் நீலு இல்லாமல் களை கட்டியதில்லை. யாருக்கும் வெட்கமில்லை, முகமது பின் துக்ளக், உண்மையே உன் விலை என்ன, என்று தணியும் இந்த சுதந்திர தாகம் என நாடகங்கள் நீலுவுடன் இணைந்தே இன்றளவும் ரசிகர் நெஞ்சங்களில் ஆழப் பதிந்துள்ளன.

1960இல் துவங்கி கிட்டத்தட்ட அறுபதாண்டு நாடக மேடை வாழ்க்கையைத் தொட்டுவிட்டவர். நாடக மேடைகள் மட்டுமல்லாது திரைப்படங்களிலும் சிறிய வயதிலேயே வந்துவிட்டார். 1966 இல் இவர் அறிமுகமான முதல் திரைப் படம் ஆயிரம் பொய். இந்தப் படத்தை இயக்கியவர் முக்தா சீனிவாசன்.

தொடர்ந்து நூற்றுக்கு நூறு, கெரளவம், பாரத விலாஸ், முகமது பின் துக்ளக், வேலும் மயிலும் துணை என கறுப்பு வெள்ளைத் திரைப்படங்களாகட்டும், அண்மைக் கால வண்ணப் படங்களான கமலின் அவ்வை சண்முகி, காதலா காதலா, பம்பல் கே சம்பந்தம், அஜித்தின் தீனா, விக்ரமின் அந்நியன், 2013ல் வந்த கல்யாண சமையல் சாதம் என 160க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நகைச்சுவை கதாபாத்திரத்திலும் குணசித்திர வேடத்திலும் நடித்தவர் நீலு.

அண்மைக் காலமாக உடல் நலம்குன்றி இருந்த நீலு, இன்று மாலை காலமானார்.

3 COMMENTS

  1. பழக இனியவர்.நல்ல நகைச்சுவை நடிகரை தமிழ் நாடு இழந்து விட்டது

  2. தமிழக திரைப்பட துறைக்கு ஒரு பெரும் இழப்பு. ஒரு நல்ல கலைஞரை இழந்துவிட்டது தமிழகம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories